நித்திரவிளை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நித்திரவிளை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 9 செப்டம்பர், 2024

போலீஸ் வாகனத்தை இடிக்க முயன்ற சொகுசு கார் - பறிமுதல்

நித்திரவிளை அருகே உள்ள கல்வெட்டான் குழி பகுதியில் நேற்று முன்தினம் இரவு பதினொரு மணியளவில் இரண்டு சொகுசு கார்களில் வந்தவர்கள் குடிபோதையில் நின்று கொண்டு, அந்த பகுதி வழியாக பைக்கில் சென்ற ஒரு நபரிடம் பிரச்சனை செய்து கொண்டிருந்தனர். அப்போது அந்தப் பகுதியில் நித்திரவிளை போலீசார் ரோந்து பணிக்காக சென்றனர். போலீசாரை கவனித்த குடிமகன்கள் உடனடியாக போலீஸ் வாகனத்தை இடிப்பது போல சென்று விட்டு, சொகுசு காரில் தப்பி சென்று விட்டனர்.
உடனடியாக போலீசார் பின்னால் சென்று அந்த 2 கார்களையும் துரத்தினார்கள். சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் துரத்திய போலீசார், துத்தூரில் வைத்து ஒரு சொகுசு காரை மட்டும் மடக்கி படித்தனர். உடனடியாக காரில் இருந்தவர்கள் இறங்கி இருளில் தப்பி ஓடிவிட்டனர். போலீசார் மடக்கி பிடித்த காரை உடனடியாக போலீஸ் நிலையம் கொண்டு வந்தனர். சாலையில் போதையில் நின்று பிரச்சனை ஈடுபட்டவர்கள் யார் என்பது குறித்து நித்திரவிளை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தக்கலை: பெண்ணை காப்பாற்ற தன்னை பலி கொடுத்த இளைஞர்

திக்கணங்கோடு அருகே உள்ள மேக்கோடு பகுதியை சேர்ந்தவர் சுனில் ராஜ் (36). பெயின்டர். இவர் நேற்று முன்தினம் திக்கணங்கோட்டில் இருந்து திங்கள்சந...