வியாழன், 5 செப்டம்பர், 2024

இருசக்கர வாகன விபத்தில் மாணவர் உயிரிழப்பு

கருங்கல் உலகன்விளை பகுதியை சேர்ந்தவர் ராஜன் மகன் அஜித் (18). இவர் நாகர்கோவில் கோணம் அரசு ஐடிஐ -ல் படித்து வந்தார். சம்பவ தினம் அதிகாலையில் அஜித் தனது
நண்பருடன் மோட்டார் சைக்கிளில் கருங்கல் கருமாவிளை பகுதியில் சென்று கொண்டிருந்தனர். அப்போது திடீரென இருச்சக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த சுவரில் மோதியது. இதில் அஜித் உட்பட இரண்டு பேரும் படுகாயம் அடைந்தனர். தகவலின் பேரில் கருங்கல் போலீசார் படுகாயம் அடைந்த 2 பேரை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரி அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் (sep 4) அஜித் உயிரிழந்தார். அவர் நண்பருக்கு தொடர்ந்து சிகிட்சை அளிக்கப்பட்டு வருகிறது. கருங்கல் போலீசார் இது குறித்து வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகிறன்றனர்.குமரி மாவட்டத்தில் அதிகமான விபத்துக்கள் தினமும் நடந்து வருவது குமரி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தக்கலை: பெண்ணை காப்பாற்ற தன்னை பலி கொடுத்த இளைஞர்

திக்கணங்கோடு அருகே உள்ள மேக்கோடு பகுதியை சேர்ந்தவர் சுனில் ராஜ் (36). பெயின்டர். இவர் நேற்று முன்தினம் திக்கணங்கோட்டில் இருந்து திங்கள்சந...