மார்த்தாண்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மார்த்தாண்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 11 செப்டம்பர், 2024

குழந்தைகளை தவிக்க விட்டு கள்ள காதலனுடன் சென்ற பெண்

குமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே உள்ள மருதங்கோடு பகுதியை சேர்ந்த ஒரு வாலிபர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். அவரது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் ஊரில் வசித்து வந்தனர். இந்த நிலையில் குழித்துறை பகுதியை சேர்ந்த 25 வயது கார் டிரைவர் ஒருவருடன் அந்த பொண்ணுக்கு பழக்கமாகி, அது கள்ளக் காதலாக மாறி அவர்கள் பல
இடங்களில் சுற்றித்திரிந்துள்ளனர். இதை அறிந்த பெண்ணின் கணவர் வெளிநாட்டிலிருந்து தற்போது சொந்த ஊருக்கு வந்துள்ளார். இது தொடர்பாக மனைவியிடம் அறிவுரை கூறியதும் ஆத்திரமடைந்த அந்தப் பெண் கடந்த 8 நாட்களுக்கு முன்பு வீட்டில் இருந்து 35 பவன் தங்க நகைகள், ரூபாய் 85 ஆயிரத்துடன் மாயமானார். இது தொடர்பாக கணவர் மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். நேற்று (செப்.,10) அந்த கள்ளக்காதல் ஜோடி மார்த்தாண்ட போலீஸ் நிலையம் வந்துள்ளது. அப்போது கணவரும் குழந்தைகளும் அந்த பெண்ணிடம் வந்து பேச்சுவார்த்தை நடத்தியும் அவள் கணவரிடம் வாழ முடியாத என கூறி கழுத்தில் கிடந்த தாலி மற்றும் நகைகள், பணம் போன்றவற்றை வீசி எறிந்து விட்டு கள்ளக்காதலுடன் வாழ்வதாக தெரிவித்துள்ளார். பின்னர் போலீஸ் நிலையத்தில் எழுதிக் கொடுத்துவிட்டு அந்த பெண் ஒரு ஆட்டோ வரவழைத்து அங்கிருந்து மின்னல் வேகத்தில் மறைந்தார்

தக்கலை: பெண்ணை காப்பாற்ற தன்னை பலி கொடுத்த இளைஞர்

திக்கணங்கோடு அருகே உள்ள மேக்கோடு பகுதியை சேர்ந்தவர் சுனில் ராஜ் (36). பெயின்டர். இவர் நேற்று முன்தினம் திக்கணங்கோட்டில் இருந்து திங்கள்சந...