Kanniyakumari லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Kanniyakumari லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 24 ஜூலை, 2024

குமரி மாவட்டத்தில் நாளை எங்கு எல்லாம் மின்தடை .

25.07.2024 (வியாழக்கிழமை) அன்று காலை 08:00 மணி முதல் மாலை 2:00 மணி வரை மீனாட்சிபுரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள்,மின்பாதைக்கு இடையூறாக உள்ள மரகிளைகளை அகற்றுதல், தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை சரி செய்தல் போன்ற பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் கீழ்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
மீனாட்சிபுரம், கோட்டார்,
வடிவீஸ்வரம், இடலாகுடி,செட்டிகுளம் சந்திப்பு , கணேசபுரம், வெள்ளாடிச்சிவிளை, கரியமாணிக்கபுரம், 
 ஓழுகினசேரி, ராஜாபாதை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் ஆகும்.


25.07.2024 (வியாழக்கிழமை) அன்று காலை 08:00 மணி முதல் 02:00 மணி வரை தெங்கம்புதூர் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள், மின்பாதைக்கு இடையூறாக உள்ள மரகிளைகளை அகற்றுதல், தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை சரி செய்தல் போன்ற பணிகள் மேற்கொள்ள இருப்பதால் தெங்கம்புதூர், பறக்கை, மேலமணக்குடி, முகிலன்விளை, மணிகட்டிபொட்டல், ஒசரவிளை, காட்டுவிளை, புதூர், பொட்டல், வெள்ளாளன்விளை, மேலகிருஷ்ணன்புதூர், புத்தளம், பள்ளம், புத்தன்துறை மற்றும் இதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும் என தெரிவித்து கொள்கிறோம்.


#Powercut #kanniyakumari #nagercoil
#Colacheltoday

புதன், 17 ஜூலை, 2024

19, 20 தேதிகளில் குமரியில் எங்கெல்லாம் மின் தடை

தேங்காய்ப்பட்டணம், முன்சிறை, நடைக்காவு பகுதியில் 19.7.2024 வெள்ளிக்கிழமை 
மின்தடை

முஞ்சிறை,காப்புக்காடு, விரிவிளை, நித்திரவிளை, புதுக்கடை, ஐரேனிபுரம், தொலையாவட்டம், மாங்கரை, விழுந்தயம்பலம், வேங்கோடு, மாதாபுரம், அரசகுளம்,பைங்குளம், தேங்காய்ப்பட்டணம், இராமன்துறை, புத்தன் துறை, இனயம், கிள்ளியூர், கீழ்குளம் சென்னித்தோட்டம், ஆகிய இடங்களுக்கும் ஆகிய இடங்களுக்கும் அவற்றை சார்ந்த துணை கிராமங்களுக்கும் மேற்படி துணை மின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் இருக்காது.

இதேபோன்று நடைக்காவு துணை மின் நிலையத்திலிருந்து மின்னூட்டம் பெறும் 
நடைக்காவு , சூரியகோடு, குளப்புறம், சுந்தரவனம், மங்காடு, வாறுத்தட்டு, குழிவிளை, கோழிவிளை, கோணசேரி, சாத்தன்கோடு, வாவறை, மணலி, பாலவிளை, வளனூர், சூழால், பாத்திமாநகர், மெதுகும்மல், வெங்கஞ்சி, பூத்துறை, தூத்தூர், கொல்லங்கோடு, கிராத்தூர் ஆகிய இடங்களுக்கும் அவற்றை சார்ந்த துணை கிராமங்களுக்கும் அன்றைய தினம் காலை 8 மணி முதல் மதியம் 2மணி வரை மேற்படி துணை மின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் இருக்காது.




மார்த்தாண்டம் பகுதியில் 20.7.2024 சனிக்கிழமை 
மின் தடை 

 மார்த்தாண்டம், காஞ்சிரகோடு, விரிகோடு, கொல்லஞ்சி, மாமூட்டுக்கடை, காரவிளை, உண்ணாமலைக்கடை, ஆயிரம்தெங்கு, பயணம், திக்குறிச்சி, ஞாறான்விளை, பேரை, நல்லூர், வெட்டுவெந்நி ஆகிய இடங்களுக்கும் அவற்றைச் சார்ந்த துணை கிராமங்களுக்கும் அன்றைய தினம் காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

சனி, 13 ஜூலை, 2024

கன்னியாகுமரி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் வைத்து காவலர்களுக்கு ஆயுதப்பயிற்சி



மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.E.சுந்தரவதனம் IPS அவர்கள் தலைமையில் ஆயுதப்படை காவலர்களுக்கு வாரந்திர கவாத்து  கன்னியாகுமரி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் வைத்து  இன்று (13/07/2024) நடைபெற்றது.

 இதில் காவலர்களுக்கு ஆயுதங்களின் செயல்பாடு குறித்தும் அதனை சிறப்பாக கையாள்வது குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது.  மேலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் காவலர்களின் குறைகளை கேட்டறிந்து  உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்கள். 

 இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் மற்றும் காவல்துறை துணை கண்காணிப்பாளர் திரு. செந்தாமரை கண்ணன் குற்றப்பிரிவு (ஆயுதப்படை பொறுப்பு) மற்றும் திரு. செல்லசுவாமி ஆயுதப்படை உதவி ஆய்வாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

வெள்ளி, 12 ஜூலை, 2024

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவில் மாவட்ட முழுவதும் அனைத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தீவிர வாகன சோதனை

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவில் மாவட்ட முழுவதும் அனைத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட  பகுதிகளில் தீவிர வாகன சோதனை

கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் *திரு. சுந்தரவதனம்  IPS அவர்கள்* உத்தரவில்  கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

 இந்த தீவிர வாகன சோதனையானது தடை செய்யப்பட்ட போதை பொருட்கள், தவறான நோக்கத்துடன் ஆயுதங்கள் வைத்திருத்தல்,  மேலும் போக்குவரத்து விதிகளை பின்பற்றாமல் வாகனம் ஓட்டுதல்  ஆகியவை சம்பந்தமாக  மாவட்டத்தின் அனைத்து உட்கோட்ட மற்றும் காவல் நிலைய எல்லை பகுதிகளில் நடைபெற்று வருகிறது.

  வாகன சோதனையில் வாகன ஓட்டுனரின் மற்றும் வாகனத்தின் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு, அவர்கள் அரசால் தடை செய்யப்பட்ட பொருட்கள் ஏதேனும் வைத்துள்ளார்களா என  சோதனை இடப்பட்டு அனுப்பப்படுகின்றனர்.

அண்ணாமலையை கண்டித்து நாகர்கோவிலில் காங்கிரஸ் கட்சி ஆர்பாட்டம்

பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை கண்டித்து குமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகர காங்கிரஸ் கட்சி சார்பில் வேப்பமூடு பூங்கா முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் எம் பி,எம் எல் ஏ பங்கேற்பு.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப் பெருந்தகை குறித்து அவதூறு பரப்பும் வகையிலும் பொய்யான தகவல்கள் கூறி வருகிறார் அவரது செயலை கண்டிக்கும் விதமாக தமிழக முழுவதும் காங்கிரஸார் அண்ணாமலையின் புகைப்படம் எரிப்பு கிளிப்பு என எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர், 

அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகர காங்கிரஸ் கட்சி சார்பில் மாநகர மாவட்ட தலைவர்.நவீன்குமார் குமார் தலைமையில் அண்ணாமலையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது,இந்த ஆர்ப்பாட்டத்தில் கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர்.எம் பி விஜயசந்த்விளவங்கோடு சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏ தாரகை கட்பர்ட் உள்ளிட்ட ஏராளமான காங்கிரஸார் கலந்து கொண்டு அண்ணாமலை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.

திங்கள், 8 ஜூலை, 2024

கன்னியாகுமரியில் பேரிடர் காலத்தில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை கொடுக்கும் வசதியுடன் கூடிய புறக்காவல் நிலையம் திறப்பு



கன்னியாகுமரி திரிவேணி சங்கமம் கடற்கரைப்பகுதியில் புதிதாக மாவட்டக் காவல்துறையால் அமைக்கப்பட்ட புறக்காவல் நிலையத்தை இன்று (08.07.2024) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் *திரு.E. சுந்தரவதனம் IPS* அவர்கள் திறந்து வைத்தார்.

 புதிதாக அமைக்கப்பட்ட புறக்காவல் நிலையத்தில் கடற்கரைக்கு வரும் பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் விதத்தில், 24 மணி நேரமும் கண்காணிக்கும் வகையில் 34 CCTV கேமராக்கள் பொருத்தப்பட்டு அதனை புறக்காவல் நிலையத்தில் கண்காணிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
பேரிடர் காலங்கள் மற்றும் கடல் சீற்ற காலங்களில் கடற்கரையில் இருக்கும் பொதுமக்களை எச்சரிக்கை செய்து, பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தும் வண்ணம் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில் கன்னியாகுமரி உட்கோட்ட காவல்துணை கண்காணிப்பாளர் திரு. மகேஷ் குமார், கன்னியாகுமரி காவல் நிலைய ஆய்வாளர் திரு. நெப்போலியன், கன்னியாகுமரி போக்குவரத்து ஒழுங்கு பிரிவு ஆய்வாளர் திரு. பிரபு மற்றும் காவலர்கள் கலந்து கொண்டனர்.

#KanniyakumariDistrictPolice 
#szsocialmedia1 
#tamilnadupolice 
#TruthAloneTriumphs #kanniyakumari
#Colacheltoday 

சனி, 6 ஜூலை, 2024

மயிலாடியில் தற்கொலைக்கு மனைவியை தூண்டியவருக்கு ஏழு ஆண்டுகள் ஜெயில்

குமரி மாவட்டம் மயிலாடியை சேர்ந்தவர்  ரவி, புத்தளம் பகுதியை  சேர்ந்தவர் விஜி  , இருவரும் 2011 ஆம் ஆண்டு  திருமணம் செய்து கொண்டனர்
இந்நிலையில் மனைவி விஜியிடம் கூடுதல் வரதட்சனை கேட்டு ரவி அடிக்கடி தகராறு செய்து வந்த நிலையில் 2012 ஆம் ஆண்டு வரதட்சணை கொடுமையால் விஜி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்,இந்த வழக்கில் நாகர்கோவில் மகிளா நீதிமன்றம் மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவர் ரவிக்கு ஏழுஆண்டுகள்  சிறை தண்டனையும் , ரூபாய் ஆயிரம் அபாராதமும்  விதித்து தீர்ப்பு அளித்தது.

#kanniyakumari #colachel #myladi #nagercoil 

வெள்ளி, 5 ஜூலை, 2024

குமரியில் தேசியகொடியை உயர்த்தி பிடித்த கம்பீர கம்பம் ,களை இழந்த சோகம் ஆட்சியர் பதிலளிக்க உத்தரவு.

கன்னியாகுமரி அருகே உள்ள மகாதானபுரம் ரவுண்டானாவில் 148 அடி உயரமுள்ள தேசிய கொடி கம்பம் நிறுவப்பட்டு, தேசியக்கொடி பறக்க விடப்பட்டது பின்னர் அதிக காற்றால் தேசிய கொடி சேதம் அடைந்தது,


அதனை தொடர்ந்து கொடி அகற்றப்பட்ட நிலையில் தற்போது வரை தேசிய கொடி பறக்க விடவில்லை,இதனால் வெறுமனே கொடி கம்பம் உள்ளது,எனவே நினைவு சின்னமான தேசிய கொடியை மீண்டும் 148 உயரமுள்ள கம்பத்தில் பறக்க விடவேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது, இந்நிலையில் இந்த வழக்கின் மனு இன்று விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில்,ஏன் தேசியக் கொடியை அங்கு பறக்க விடவில்லை என நீதிபதி கேள்வி எழுப்பினார், இதற்கு மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.


#kanniyakumari #Colacheltoday #nagercoil

நாகர்கோவிலில் ஓடும் பேருந்தில் செயின் பறிப்பில் ஈடுபட்ட பெண் கைது

குமரி மாவட்டம் நாகர்கோவில் கங்காடியா பள்ளி அருகில் ஓடும் அரசு பஸ்சில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி பெண் பயணிகளிடம் தங்க செயின் பறிப்பில் ஈடுப்பட்ட பெண்களால் பரபரப்பு


செயினை பறித்து விட்டு பேருந்தில் இறங்கி தப்பமுயன்ற போது தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த காளீஸ்வரி என்ற பெண்ணை பொதுமக்கள் பிடித்து நேசமணிநகர் போலீசாரிடம் ஒப்படைத்தனர், இதில் தொடர்புடைய இன்னொரு பெண்ணான திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த இசக்கியம்மாளை குளச்சல் போலீசார் கைது செய்தனர்.


#nagercoil #kanniyakumari #Colachel

வியாழன், 4 ஜூலை, 2024

22 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த ரவுடி,அதிரடியாக கைது செய்த குமரி போலீசார்



குமரி மாவட்டம் வடசேரி காவல் நிலைய பகுதிக்குட்பட்ட திருப்பதிசாரத்தை சேர்ந்த வெள்ளை கணேசன் (51) என்பவர் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த  ரவுடி ஆவார். நெல்லை ,குமரி மாவட்டங்களில் கொலை வழக்கும், கொலை முயற்சி வழக்கும்   நிலுவையில் உள்ளது.
நீதிமன்றத்தில் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட  கணேசன் (எ) வெள்ளை கணேசன் கடந்த 22 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வந்தார்.  அவரை உடனடியாக கண்டுபிடித்து கைது செய்ய கன்னியாகுமரி மாவட்ட காவல்  கண்காணிப்பாளர் திரு.E. சுந்தரவதனம்  IPS அவர்கள்  உத்தரவிட்டிருந்தார்கள்.

உத்தரவின்படி வடசேரி காவல் நிலைய காவல் ஆய்வாளர் திரு. காசிபாண்டியன்    அவர்கள் தலைமையில் தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த பிரபல ரவுடி கணேசன் (எ) வெள்ளை கணேசன் என்பவரை தனிப்படை போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

புதன், 3 ஜூலை, 2024

கட்டாற்று நீரில் அடித்து செல்லப்பட்டவர் சடலமாக மீட்பு


கன்னியாகுமரி மாவட்டம் வீரநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன் என்பவர் நேற்று ஆற்றில் மாடு ஒன்றை குளிப்பாட்டிக் கொண்டிருந்தபோது திடீரென வந்த காட்டாற்று வெள்ளத்தில் இழுத்து செல்லப்பட்டார்.

 இச்சம்பவம் குறித்து உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. வீரர்கள் அவரைத் தேடி வந்த நிலையில் இன்று சுமார் 3.00 மணியளவில் மணிகண்டன் சடலமாக கண்டு எடுக்கப்பட்டார்

புதிதாக பணிக்கு சேர்ந்த குமரி தொழிலாளி விபத்தில் பலி





குமரி மாவட்டம் கன்னியாகுமரி பணிமனையில் புதிதாக பணிக்கு சேர்ந்த பிரபாகரன் திருப்பதியில் இருந்து கன்னியாகுமரி நோக்கி வந்து கொண்டிருந்த பேருந்தில் வந்து கொண்டிருந்தபோது 

திருச்சி பாடலூர் அருகே சிறுகானுர் என்ற இடத்தில் வைத்து லாரியுடன் பேருந்து மோதி ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தார்

ஒழுங்கினசேரி பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் பள்ளி குழந்தைகள் வாகன ஓட்டிகள் அவதி



குமரி – திருவனந்தபுரம் இடையே நடந்து வரும் இரட்டை ரயில் பாதை பணியின் ஒரு கட்டமாக நாகர்கோவில் ஒழுகினசேரி பகுதியில் கூடுதல் தண்டவாளம் அமைக்கும் பணி நடக்கிறது.இதற்காக பழைய பாலத்தை இடித்து விட்டு புதிய பாலம் அமைக்கப்பட உள்ளது. புதிய பாலம் அமைக்கும் பணி பாதியில் நிற்கும் நிலையில் கூடுதல் தண்டவாளம் அமைப்பதுடன், பழைய பாலத்தை இடிக்கவும் ரயில்வே நிர்வாகம் முடிவு செய்து பணிகளை தொடங்கி உள்ளது.இதன் காரணமாக தற்போது ஒழுகினசேரியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு உள்ளது.


நாகர்கோவில் மாநகரின் நுழைவு வாயில் பகுதி என்பதால், தற்போது நாகர்கோவிலுக்குள் வாகனங்கள் வருவதற்கும், நாகர்கோவிலில் இருந்து வாகனங்கள் வெளியேறவும் முடியாமல் சிக்கி திணறி வருகின்றன. காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி கல்லூரி மற்றும் அரசு தனியார் நிறுவனங்களில் வேலை பார்த்து செல்பவர்கள் அதிக அளவில் செல்வதால் குறுகலான இந்த பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் வரை போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.*

வெள்ளி, 19 ஜூன், 2020

மாவட்ட ஆட்சியரின் செய்திக்குறிப்பு 19.6.20

சென்னையிலிருந்து கன்னியாகுமரி மாவட்டம் வரும் நபர்கள் சென்னை முதல் கேரளா வரை இ - பாஸ் ஒப்புதல் பெற்று வருகின்றார் . இவர்கள் கேரளா செல்வதாக கருதி சோதனைச் சாவடியில் சளி பரிசோதனை மேற்கொள்ளப்படாமல் தொடர்ந்து பயணம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர் . ஆனால் உண்மையில் இவர்கள் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாக உள்ளனர் . இதனால் நோய்த் தொற்று இருக்கும் சூழ்நிலையில் மற்றவர்களுக்கும் பாதிப்பு ஏற்பட காரணமாகி விடுகின்றனர் . சரியான இருப்பிட ஆவணங்கள் அடிப்படையில் இ - பாஸ் பெற்று வருமாறு பொது மக்களுக்கு தெரிவிக்கப்படுகிறது . ஏற்கனவே தொடர்ந்து வலியுறுத்துவது போல் சென்னை உள்ளிட்ட வெளியிடங்களிலிருந்து வருபவர்கள் தங்கள் பகுதிக்கு வந்திருப்பதாக பொதுமக்கள் அறிந்தால் மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி எண் 1077 - ல் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளாப்படுகிறது . தகவல் தெரிவிப்பவர்கள் குறித்து விபரம் வெளியிடப்படமாட்டாது . - 

சென்னையிலிருந்து இ - பாஸ் இல்லாமல் அஞ்சுகிராமம் வரை வந்து பின்னர் உள்ளூர் ஆட்டோவில் மாவட்டத்திற்குள் நுழைய முயன்ற நான்கு பேர் கண்டறியப்பட்டனர் . ஆட்டோ ஓட்டி வந்த லெவிஞ்சிபுரம் சாலைப்பதூர் கணேசன் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவரது ஆட்டோ பாணர் TN74 P 0183 பறிமுதல் செய்யப்பட்டது . . 

முக கவசம் அணியாமல் பொது வெளியில் நடமாடிய 278 பேருக்கு இன்று அபராதமாக ரூபாய் 27800 வசூலிக்கப்பட்டது . 

 கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆசாரிபள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும் , களபணியாளர்கள் மூலமாகவும் , சோதனைச்சாவடிகள் மூலமாகவும் 33580 நபர்கள் கொரோனா சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் . . 

தற்போது கன்னியாகுமரி மாவட்டம் , ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 76 பேர் சிகிச்சையில் உள்ளனர் , 

கொரோனா நோய்த்தோற்றால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை பொத்தம் 110 பேர் முற்றிலும் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர் 

 கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் மொத்தம் 725 நபர்கள் வீட்டு தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளனர் . மேலும் வெளியூரிலிருந்து கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வந்த பயணிகளில் 9118 நபர்கள் வீட்டு தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளனர்....

ஊரடங்கு உத்தரவை மீறிய வகையில் மொத்தத்தில் இதுவரை 8404 வழக்குகளும் , 6254 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன

வெள்ளி, 10 ஏப்ரல், 2020

நாகர்கோவிலில் மேலும் 11 கைதிகள் விடுவிப்பு

நாகர்கோவிலில் மேலும் 11 கைதிகள் விடுவிப்பு



கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கவும், சிறைகளில் இட நெருக்கடி ஏற்படாமல் இருக்கவும் சின்ன ,சின்ன வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறைகளில் இருக்கும் கைதிகள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டு வருகிறார்கள். இதேபோல் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட சிறையிலும் கைதிகள் விடுதலை செய்யப்பட்டு வருகிறார்கள். கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை 62 பேர் விடுதலை செய்யப்பட்டு இருந்தனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் 5 பேரும், நேற்று 6 பேருமாக 11 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.......

வியாழன், 9 ஏப்ரல், 2020

குளத்தில் மீன்பிடித்த 4 பேர் மீது வழக்கு

ஊரடங்கை மீறி

குளத்தில் மீன்பிடித்த 4 பேர் மீது வழக்கு

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இந்தநிலையில் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் மருந்துகள் மட்டும் வாங்க பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வருகிறார்கள்.

இந்நிலையில்  தக்கலை சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான போலீசார் மருதவிளை கொற்றிகுளம் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் உள்ள குளத்தில் அழகியமண்டபம் பனங்காலவிளை பகுதியை சேர்ந்த ராஜன்(வயது 39), அருள்(39), ஸ்டான்லி(32), சதீஷ்(29) ஆகிய 4 பேர் மீன் பிடித்து கொண்டிருந்தனர். இவர்கள் மீது ஊரடங்கு உத்தரவை மீறியதாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

செவ்வாய், 7 ஏப்ரல், 2020

போதகர்கள் 2 பேர் மீது வழக்கு ஊர்மக்களை அழைத்து ஆராதனை

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊர் டங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது . வெளியில் சுற்றிதி ரிபவர்களை போலீசார் கைது செய்து வருகிறார்கள் . வாக னங்களும் பறிமுதல் செய்யப்படுகிறது . கோவில்கள் ,ஆலயங்கள் , மசூதிகள் மூடப்பட்டுள்ளன . 

இந்த நிலையில் நேற்று முன்தினம் காலையில் கொல்லங் கோடு அருகே உள்ள ஒரு மீனவ கிராமத்தில் போதகர்கள் 2 பேர் ஊர் மக்களை திரட்டி ஆலயத்தில் ஆராதனை நடத்தினர் . இதுபற்றி தகவல் அறிந்த கொல்லங்கோடு போலீசார் விரைந்து சென்று தடை உத்தரவை மீறி ஆலயத்தில் கூடி இருந்தவர்களை விரட்டி விட்டனர் . பின்னர் தடை உத்தரவை மீறி செயல்பட்டதாக போதகர்கள் 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர் . 

தக்கலை: பெண்ணை காப்பாற்ற தன்னை பலி கொடுத்த இளைஞர்

திக்கணங்கோடு அருகே உள்ள மேக்கோடு பகுதியை சேர்ந்தவர் சுனில் ராஜ் (36). பெயின்டர். இவர் நேற்று முன்தினம் திக்கணங்கோட்டில் இருந்து திங்கள்சந...