இரணியல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இரணியல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திங்கள், 9 செப்டம்பர், 2024
இரணியல் அருகே 4 வழிச்சாலையில் பைக் ரேஸ் ,வாலிபர் ஓட்டிய பைக் மோதி தம்பதி படுகாயம்
நாகர்கோவில் திருவனந்தபுரம் தேசிய நெடுஞ் சாலை தோட்டியோட் டில் இருந்து நான்கு வழி சாலை பிரிந்து கொன்னக் குழிவிளை, நுள்ளிவிளை. மணக்கரை ஆகிய கிராமங்கள் வழியாக செல்கிறது. பல்வேறு பகுதிகளில் சாலை பணிகள் நடந்து வந்தாலும், இந்தப் பகுதிகளில் போடப்பட்டுள்ள சாலையை மக்கள் போக்குவரத்துக்கு பயன்படுத்தி வருகின்றனர்.
இதனிடையே அகலமாக உள்ள இந்த சாலையில் இளைஞர்கள் பைக் ரேஸ் நடத்துவதும், ரீல்ஸ்
எடுப்பதும் அடிக்கடி நடந்து வருகிறது. நேற்று மாலையும் மணக்கரை நான்கு வழிச்சாலைக்கு பைக்கில் வந்த வாலிபர்கள் சிலர் பைக் ரேஸ் நடத்தி ரீல்ஸ் எடுத்துள்ளனர். சிறிப் பாய்ந்த பைக்குகளில் ஒரு வரை ஒருவர் முந்தி சென்றதாக தெரிகிறது.
அப்போது ஒரு பைக் புளியமூடு பகுதியில் சென்றபோது முன்னால் சென்ற பைக் மீது வேகமாக மோதியது.
இரண்டு பைக்குகளும் இழுத்துச் செல்லப்பட்டு பைக்கில் இருந்தவர்கள் தூக்கி வீசப்பட்டனர்.
இதில் முன்னால் பைக்கில் சென்ற தம்பதியரான வில்லுக்குறி பகுதியை சேர்ந்த சிஆர்பி எப் வீரர் ராஜன் (47, அவரது மனைவி ஹேமா (42 ஆகிய இருவரும் படுகாயம் அடைந்தனர்.
ரத்த வெள்ளத்தில் வலி யால் துடித்த அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு களியங்காட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனை யில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவர்கள் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்து ஏற்படுத்திய பைக்கில் வந்த வாலிபர் வினோத் என்பவரும் படு காயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார். சம்ப வம் குறித்து இரணியல் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒதுக்குப்புற மான இந்த நான்கு வழிச் சாலையை பொதுமக்கள் நலன் கருதி போலீசார் அடிக்கடி கண்காணிக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ok
புதன், 4 செப்டம்பர், 2024
குமரியில் அரசு பஸ் டிரைவருக்கு 4 ஆண்டு சிறை
திங்கள்நகர் அருகே உள்ள சேங்கரவிளை பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் அவர் மனைவி ராஜம் . இவர்கள் கடந்த 2015ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். நெய்யூர் வடக்கு தெரு பகுதியில் செல்லும் போது, எதிரே அழகிய மண்டபத்திலிருந்து குளச்சல் நோக்கி வேகமாக வந்த அரசு பஸ் மோட்டார் சைக்கிள் மீதும் மற்றொரு கார் மீது மோதியது.
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற தம்பதிகளான செல்வராஜ், ராஜம் இரண்டு பேரும் உயிரிழந்தனர். இது தொடர்பாக அரசு பஸ்
டிரைவர் ராபர்ட் சிங் என்பவர் மீது இரணியல் போலீசார் வழக்கு பதிவு செய்து, இந்த வழக்கு இரணியல் கோர்ட்டில் நடந்து வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி அமர்தீன் (செப்.,2) தீர்ப்பு வழங்கினார். அதில் அரசு பஸ் ஓட்டி விபத்து ஏற்படுத்தி உயிரிழப்பு ஏற்படுத்திய டிரைவர் ராபர்ட் சிங்கிற்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ. 21 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்..
இந்த வழக்கில் அரசு தரப்பில் அரசு வழக்கறிஞர் ரேவதி வாதாடினார். தொடர்ந்து ராபர்ட் சிங் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
தக்கலை: பெண்ணை காப்பாற்ற தன்னை பலி கொடுத்த இளைஞர்
திக்கணங்கோடு அருகே உள்ள மேக்கோடு பகுதியை சேர்ந்தவர் சுனில் ராஜ் (36). பெயின்டர். இவர் நேற்று முன்தினம் திக்கணங்கோட்டில் இருந்து திங்கள்சந...

-
03.09.2024 (செவ்வாய்க்கிழமை) அன்று காலை 08:00 மணி முதல் மாலை 2:00 மணி வரை நாகர்கோவில், வடசேரி, ஆசாரிபள்ளம் மற்றும் தடிகாரண்கோணம் துணை ம...
-
தக்கலையில் கணவனை உதறிவிட்டு கள்ள காதலனுடன் சென்ற இளம்பெண்
-
கருங்கல் உலகன்விளை பகுதியை சேர்ந்தவர் ராஜன் மகன் அஜித் (18). இவர் நாகர்கோவில் கோணம் அரசு ஐடிஐ -ல் படித்து வந்தார். சம்பவ தினம் அதிகாலைய...