Kaniyakumari லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Kaniyakumari லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 7 ஜூலை, 2024

கன்னியாகுமரி மாவட்ட குளங்களிலிருந்து மண் எடுக்க அனுமதி



கன்னியாகுமரிமாவட்ட பொதுப்பணித்துறை,நீர்வள ஆதார துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 417 குளங்கள் மற்றும் ,பஞ்சாயத்துதுறை  ஊரக வளர்ச்சித்துறை  கட்டுப்பாட்டில் உள்ள 192 குளங்கள் மொத்தம் 609 குளங்களிலிருந்து இலவச மண் எடுக்க அனுமதி வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளதாக குமரி மாவட்ட ஆட்சி தலைவர்  ஶ்ரீதர் தகவல் தெரிவித்துள்ளார்,      

இதற்கு தாசில்தார் அனுமதி பெற வேண்டும். அதன் பிறகு சம்மந்தப்பட்ட நீர்நிலைகளின் கட்டுப்பாட்டு அலுவலர் முன்னிலையில் வண்டல்மண் மற்றும் களிமண் இலவசமாக எடுத்துக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் உரிய விண்ணப்பதாரர்களிடமிருந்து online முறையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விண்ணப்பதாரர்கள் tne- sevai.tn.gov.in  இணைய முகவரியில் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்படுள்ளது .


#kanniyakumari #collector #colacheltoday #kulam #tamilnadu 

வியாழன், 9 ஜூலை, 2020

குமரி மாவட்ட ஆட்சியர் அவர்களின் செய்தி :



ஈரானிலிருந்து வந்த 535 நபர்கள் கன்னியாகுமரி மாவட்டத்தில் 6 தனிமைபடுத்தும் மையங்களில் தங்க வைக்கப்பட்டனர். 7 நாட்கள் தனிமைபடுத்தல் முடிந்து அரசு பேருந்து மூல அவரவர் இல்லங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதில் 5 நபர்களுக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர்.

வெளிநாடுகளில் இருந்து விமானம் மூலம் திருவனந்தபுரம் வந்து களியக்காவிளை சோதனை சாவடி வழியாக வருகின்ற பிறமாவட்டங்களை சேர்ந்த நபர்கள் அரசு பேருந்து மூலம் அந்தந்த
மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். 

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட மற்றும் அவர்களது சந்திப்பின் மூலம் கண்டறியப்பட்ட நபர்கள் பற்றிய விவரங்களை சேகரிக்க அரசு அலுவலர்கள் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டு தகவல்கள் தினசரி சேகரிக்கப்பட்டு வருகின்றன. 

தனிமைப்படுத்தல் முகாமிலிருந்து குணமாகி வீட்டு தனிமையில் இருப்பவர்கள் உடல் நலம் குறித்து விபரங்கள் சேகரிக்க தனி குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

முகக்கவசம் அணியாமல் பொது வெளியில் நடமாடிய 172 பேருக்கு இன்று அபராதமாக ரூபாய் 17200 வசூலிக்கப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆசாரிபள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில், களபணியாளர்கள் மூலமாகவும், சோதனைச்சாவடிகள் மூலமாகவும் 55692 நபர்கள் கொரோனா சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

 தற்போது கன்னியாகுமரி மாவட்டம், ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பேர் 439 சிகிச்சையில் உள்ளனர்.

கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை மொத்தம் 453 பேர் முற்றிலும் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் மொத்தம் 2954 நபர்கள் வீட்டு தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும் வெளியூரிலிருந்து கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வந்த பயணிகளில் 5231 நபர்கள் வீட்டு தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளனர்

ஊரடங்கு உத்தரவை மீறி தலையில் மொத்தத்தில் இதுவரை 8507 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் ஊரடங்கு உத்தரவை மீறிய வகையில் 6328 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

#colacheltoday
#kanniyakumari
#kanyakumari

தக்கலை: பெண்ணை காப்பாற்ற தன்னை பலி கொடுத்த இளைஞர்

திக்கணங்கோடு அருகே உள்ள மேக்கோடு பகுதியை சேர்ந்தவர் சுனில் ராஜ் (36). பெயின்டர். இவர் நேற்று முன்தினம் திக்கணங்கோட்டில் இருந்து திங்கள்சந...