நாகர்கோவில் மாநகர் பகுதியில் போக்குவரத்து மாற்றம்
குமரி மாவட்டம் நாகர்கோவில் பால்பண்ணை சந்திப்பில் இருந்து விருந்தினர் மாளிகை வரை பாதாள சாக்கடை திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது.அதன் தொடர்ச்சியாக கலெக்டர் அலுவலகம் முதல் செட்டி குளம் சந்திப்பு வரை வேலை நடைபெற்று வருவதால் கீழ்கண்டவாறு போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.
1.ஆசாரிபள்ளம், டெரிக் சந்திப்பு, ஆட்சியர் அலுவலகம், செட்டி குளம் வழியாக அண்ணா பேருந்து நிலையம் செல்லும் பேருந்துகள் வழித்தடம் மாற்றப்பட்டு ஆசாரிபள்ளம், பால்பண்ணை சந்திப்பு,வெட்டூர்ணிமடம் கிறிஸ்து அரசர் ஆலய சந்திப்பு, WCC , மணிமேடை, வேப்பமூடு சந்திப்பு வழியாக அண்ணா பேருந்து நிலையம் செல்லுமாறு மாற்றப்பட்டுள்ளது.
2.தோட்டியோடு ,சுங்கான்கடை, பார்வதி புரம், பால்பண்ணை,டெரிக்சந்திப்பு, ஆட்சியர் அலுவலகம் வழியாக அண்ணா பேருந்து நிலையம், வடசேரி பேருந்து நிலையம் சென்று வந்த பேருந்துகள் வழித்தடம் மாற்றப்பட்டு சுங்கான்கடை, பார்வதி புரம், வெட்டூர்ணிமடம், WCC வழியாக அண்ணா பேருந்து நிலையம் அல்லது வடசேரி பேருந்து நிலையம் செல்லுமாறு வழித்தடம் மாற்றம் செய்யப்படுகிறது.
3.மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து டதி பள்ளி வழியாக செல்லும் வாகனங்கள் பால்பண்ணை, ஹோலி கிராஸ் மருத்துவமனை, வாட்டர் டேங்க் வழியாக செல்லலாம் அல்லது ஆட்சியர் அலுவலகம், செட்டிகுளம் சந்திப்பு, கோர்ட் ரோடு வழியாக செல்லுமாறு மாற்றம் செய்யப்படுகிறது.
4.வடசேரி மற்றும் அண்ணா பேருந்து நிலையத்திலிருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம், டெரிக் சந்திப்பு வழியாக ஆசாரிபள்ளம் அல்லது பார்வதி புரம் செல்லும் வழித்தடத்தில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை.
மேற்கண்ட வழித்தட மாற்றம் போத்தீஸ் ரவுண்டானா பகுதி வேலை முடியும் வரை உத்தேசமாக 10.08.2024 முதல் 14.08.2024 ம் தேதி வரை மாற்றம் செய்யப்பட உள்ளது.
மேற்கண்ட போக்குவரத்து பொதுமக்கள் ஒத்துழைப்பு நல்குமாறு, மாற்றத்திற்கு கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
#Traffic #Nagercoil #City #colacheltoday