திருவட்டார் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திருவட்டார் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 2 செப்டம்பர், 2024

பைக் மீது வாகனம் மோதி விபத்து சிறுவன் பலி தந்தைக்கு காயம்

குமரி மாவட்டம் பெருஞ்சாணி பகுதியை சேர்ந்தவர் விஜு .நேற்று மாலை பைக்கில் தனது மகன் ஆகாஷ் 12 வயது ஆகிறது உறவினர் ஒருவரின் கல்லறை பிரதிஷ்டை நிகழ்ச்சிக்கு சென்று கொண்டிருந்தனர்.அப்போத
வேர்க் கிளம்பி தபால் நிலையம் அருகில் செல்லும் போது இரு சக்கர வாகனத்தின் பின்னால் வந்த ஜீப் ஒன்று மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் தூக்கி வீசப்பட்ட சிறுவன் ஆகாஷ், தந்தை விஜு படுகாயம் அடைந்தனர். அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆகாஷை குழித்துறை அரசு மருத்துவமனையில் சேர்ந்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் சிறுவன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். தந்தை விஜு மார்த்தாண்டம் பகுதியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிட்சை பெற்று வருகிறார். விபத்தில் உயிரிழந்த சிறுவன் தற்போது 7-ம் வகுப்பு படித்து வருகிறான். திருவட்டார் போலீசார் வழக்கு விபத்து ஏற்படுத்திவிட்டு சென்ற ஜீப் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

ஞாயிறு, 25 ஆகஸ்ட், 2024

குமரி கொள்ளை: போலீஸ் துரத்திய திருடனின் கால் உடைந்தது

திருவட்டாரை அடுத்த வீயன்னூரில் வீடு புகுந்து தொழிலதிபரை தாக்கி நகை பறித்த சம்பவத்தில் போலீசார் தேடிய நிலையில் தப்பிக்க முயன்ற போது கால் முறிந்த பிரபல கொள்ளையனுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தக்கலை: பெண்ணை காப்பாற்ற தன்னை பலி கொடுத்த இளைஞர்

திக்கணங்கோடு அருகே உள்ள மேக்கோடு பகுதியை சேர்ந்தவர் சுனில் ராஜ் (36). பெயின்டர். இவர் நேற்று முன்தினம் திக்கணங்கோட்டில் இருந்து திங்கள்சந...