செவ்வாய், 30 ஜூன், 2020

மாவட்ட ஆட்சித்தலைவரின் இன்றைய செய்திக்குறிப்பு


☞  05.07.2020 , 12.07.2020 , 19.07.2020 மற்றும் 26.07.2020 ஆகிய ஞாயிற்றுக் கிழமைகளில் அரசு அறிவிப்பின்படி முழு ஊரடங்கு எந்தவிதமான தளர்வுகளும் இன்றி கன்னியாகுமரி மாவட்டத்தில் அமல் படுத்தப்படும் .

☞ அரசு அறிவிப்பின்படி கன்னியாகுமரி மாவட்டத்திற்குள் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ள தனியார் மற்றும் அரசு பொது பேருந்து போக்குவரத்து 01.07.2020 முதல் 15.07.2020 வரை தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது .

☞   கொரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்காக பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் , ஏற்கனவே நடைமுறையில் உள்ள பல்வேறு கட்டுப்பாடுகளும் , தளர்வுகளும் 31.07.2020 நள்ளிரவு 12 மணி வரை கன்னியாகுமரி மாவட்டத்தில் நீட்டிப்பு செய்யப்படுகிறது .

☞ மாவட்டத்திற்குள் இ - பாஸ் இல்லாமல் செல்ல அனுமதி அளிக்கப்படும் .

☞ வெளிமாநிலங்களுக்கு சென்று வரவும் , வெளி மாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டுக்குள் வரவும் , மாவட்டங்களுக்கிடையே சென்று வரவும் , இ - பாஸ் முறை தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் .

☞ கொரோனா பரவல் தற்போது கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிகரித்திருப்பதைத் தொடர்ந்து மக்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வேண்டிய அவசியம் எழுந்துள்ளது , அதன்படி நாளை ( 01.07.2020 ) முதல் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கடைகள் அனைத்தும் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே இயங்க வேண்டும் . பொதுமக்களும் , வணிக பெருமக்களும் மாவட்ட நிர்வாகத்திற்கு உரிய ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது .

☞ கொரோனாவால் பாதிக்கப்படுகிறவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் கூடுதல் எண்ணிக்கையில் வரும் நபர்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கும் பொருட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனை அருகில் ஆறு இடங்களில் கோவிட் பராமரிப்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன .

☞ கொரோனா பரிசோதனைக்காக மருத்துவப்பணியாளர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் தங்கள் பகுதிகளுக்கு வரும்போது பொதுமக்கள் அவர்களுக்கு உரிய ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறது .

☞ பரிசோதனையை தவிர்க்கும் விதத்தில் பொதுமக்கள் செயல்பட்டால் உண்மையாக மறுக்கப்பட்டவர்கள் விபரம் தெரியாத நேர்வுகளில் , கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவது சிரமங்களை ஏற்படுத்தும் என்பதை மனதில் கொண்டு பொது மக்கள் உரிய ஒத்துழைப்பு வழங்க கேட்டுக் கொள்ளப்படுகிறது . -

☞ முககவசம் அணியாமல் பொது வெளியில் நடமாடிய 225 பேருக்கு இன்று அபராதமாக ரூபாய் 22500 வசூலிக்கப்பட்டது .

☞ கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆசாரிபள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும் , களபணியாளர்கள் மூலமாகவும் , சோதனைச்சாவடிகள் மூலமாகவும் 44866 நபர்கள் கொரோனா சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்

☞தற்போது கன்னியாகுமரி மாவட்டம் , ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 225 பேர் சிகிச்சையில் உள்ளனர் .

☞ கொரோனா நோய்த்தோற்றால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை மொத்தம் 206 பேர் முற்றிலும் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர் . 

☞ கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் மொத்தம் 1797 நபர்கள் வீட்டு தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளனர் . மேலும் வெளியூரிலிருந்து கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வந்த பயணிகளில் 6816 நபர்கள் வீட்டு தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளனர் .

☞  ஊரடங்கு உத்தரவை மீறிய வகையில் மொத்தத்தில் இதுவரை 8480 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன . மேலும் வாரடங்கு உத்தரவை மீறிய வகையில் 6318 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன .

- மாவட்ட ஆட்சித்தலைவர் , கன்னியாகுமரிமாவட்டம் .

#Colacheltoday

வெள்ளி, 19 ஜூன், 2020

மாவட்ட ஆட்சியரின் செய்திக்குறிப்பு 19.6.20

சென்னையிலிருந்து கன்னியாகுமரி மாவட்டம் வரும் நபர்கள் சென்னை முதல் கேரளா வரை இ - பாஸ் ஒப்புதல் பெற்று வருகின்றார் . இவர்கள் கேரளா செல்வதாக கருதி சோதனைச் சாவடியில் சளி பரிசோதனை மேற்கொள்ளப்படாமல் தொடர்ந்து பயணம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர் . ஆனால் உண்மையில் இவர்கள் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாக உள்ளனர் . இதனால் நோய்த் தொற்று இருக்கும் சூழ்நிலையில் மற்றவர்களுக்கும் பாதிப்பு ஏற்பட காரணமாகி விடுகின்றனர் . சரியான இருப்பிட ஆவணங்கள் அடிப்படையில் இ - பாஸ் பெற்று வருமாறு பொது மக்களுக்கு தெரிவிக்கப்படுகிறது . ஏற்கனவே தொடர்ந்து வலியுறுத்துவது போல் சென்னை உள்ளிட்ட வெளியிடங்களிலிருந்து வருபவர்கள் தங்கள் பகுதிக்கு வந்திருப்பதாக பொதுமக்கள் அறிந்தால் மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி எண் 1077 - ல் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளாப்படுகிறது . தகவல் தெரிவிப்பவர்கள் குறித்து விபரம் வெளியிடப்படமாட்டாது . - 

சென்னையிலிருந்து இ - பாஸ் இல்லாமல் அஞ்சுகிராமம் வரை வந்து பின்னர் உள்ளூர் ஆட்டோவில் மாவட்டத்திற்குள் நுழைய முயன்ற நான்கு பேர் கண்டறியப்பட்டனர் . ஆட்டோ ஓட்டி வந்த லெவிஞ்சிபுரம் சாலைப்பதூர் கணேசன் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவரது ஆட்டோ பாணர் TN74 P 0183 பறிமுதல் செய்யப்பட்டது . . 

முக கவசம் அணியாமல் பொது வெளியில் நடமாடிய 278 பேருக்கு இன்று அபராதமாக ரூபாய் 27800 வசூலிக்கப்பட்டது . 

 கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆசாரிபள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும் , களபணியாளர்கள் மூலமாகவும் , சோதனைச்சாவடிகள் மூலமாகவும் 33580 நபர்கள் கொரோனா சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் . . 

தற்போது கன்னியாகுமரி மாவட்டம் , ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 76 பேர் சிகிச்சையில் உள்ளனர் , 

கொரோனா நோய்த்தோற்றால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை பொத்தம் 110 பேர் முற்றிலும் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர் 

 கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் மொத்தம் 725 நபர்கள் வீட்டு தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளனர் . மேலும் வெளியூரிலிருந்து கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வந்த பயணிகளில் 9118 நபர்கள் வீட்டு தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளனர்....

ஊரடங்கு உத்தரவை மீறிய வகையில் மொத்தத்தில் இதுவரை 8404 வழக்குகளும் , 6254 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன

ஞாயிறு, 14 ஜூன், 2020

குளச்சல் காவல்துறையின் முக்கிய அறிவிப்பு...

குமரி மாவட்டம்..

குளச்சல் நகர பகுதி மக்களுக்கு விழிப்புணர்வு பதிவு.... 

குளச்சல் காவல்துறையின் முக்கிய அறிவிப்பு...

குளச்சல் ,சைமன்காலணி,கோடிமுனை ,வாணியகுடி ,குறும்பனை ,கொட்டில்பாடு  ஆகிய‌ பகுதி மீனவ கிரமாங்களில் வாழும் மக்களுக்கு  எச்சரிக்கை பதிவு தயவு செய்து அரசும் அரசு அதிகாரிகளும் , காவல்துறை அதிகாரிகளும் அறிவுறுத்துவதை தயவு செய்து கேட்க உங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் மிகவும் மிதவும் கொடியை நோயான கொரோனா வைரஸ் பாதிப்பு நாட்களுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது ஆகையால் பொதுமக்கள் ஆகிய‌ நாம் தான்  சமூக இடைவெளியை கடைபிடித்தும் , வெளியில் வரும் பொதும் முககவசம் அணிந்தும் நடக்க வேண்டும்‌ என்பதை நினைவில் கொள்ளுங்கள் மக்களே.....

தனித்திருப்போம்‌..
தேசத்தை காப்போம்....

தக்கலை: பெண்ணை காப்பாற்ற தன்னை பலி கொடுத்த இளைஞர்

திக்கணங்கோடு அருகே உள்ள மேக்கோடு பகுதியை சேர்ந்தவர் சுனில் ராஜ் (36). பெயின்டர். இவர் நேற்று முன்தினம் திக்கணங்கோட்டில் இருந்து திங்கள்சந...