புதன், 7 ஆகஸ்ட், 2024

மாணவர்களுக்கு அறிவுரை வழங்கிய காவல்துறை

நாகர்கோவில் அடுத்த கோணம் அரசு தொழில்நுட்ப கல்லூரி சாலையில் இன்று மாலையில், சென்ற அரசு பேருந்து படிக்கட்டில்தொங்கியப்படி பள்ளி,கல்லூரி மாணவர்கள் பயணம் செய்தனர்,இதனை கவனித்த நாகர்கோவில் போக்குவரத்து போலீசார் விரைந்து சென்று பேருந்தை நிறுத்தி படிக்கட்டில் இருந்து மாணவர்களை இறக்கிவிட்டு அறிவுரை கூறினர்,மேலும் நடத்தினரிடம் படிக்கட்டில் மாணவர்கள் பயணம் செய்ய அனுமதிக்க கூடாது எனவும் தெரிவித்தார்.

செய்தி : 2
____________

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகர பகுதி சாலைகளில் அபாயகரமாகவும்,
இருசக்கர வாகனத்தில் பதிவெண் இன்றியும், ஓட்டுநர் உரிமம் இல்லாமலும்,சாலையில் விலை உயர்ந்த இருசக்கர வாகனத்தை ஓட்டி வரப்பட்ட 9 இருசக்கர வாகனங்களை நாகர்கோவில் போக்குவரத்துபோலீசார் பறிமுதல் செய்தனர்,மேலும் அந்த ஒன்பது இருசக்கர வாகனங்களுக்கும் ரூ.54500 அபராதம் விதித்தனர்.

சனி, 3 ஆகஸ்ட், 2024

நாகர்கோவிலில் வயநாட்டில் உயிரிழந்த ஆத்மாக்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி கண்ணீர் அஞ்சலி

கேரள மாநிலம் வயநாடு பகுதிகளான மேப்பாடி,சூரல்மலை, முண்டகை, அட்டமலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவால் சுமார் 350 க்கு மேற்பட்டோர்
உயிரிழந்துள்ளனர்,
அந்த ஆன்மாக்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இன்று கன்னியாகுமரி மாவட்டம்
நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையம் முன்பு மாநகர மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில்,மாநகர மாவட்ட தலைவர் நவீன் குமார் தலைமையில் காங்கிரஸார் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி மவுன அஞ்சலி செலுத்தினர், இதில் ஏராளமான காங்கிரசார் கலந்து கொண்டனர், வயநாடு நிலச்சரிவில் உயிர் இழந்தவர்களுக்கு  அஞ்சலி செலுத்துவதில் முதல் நபராக,காங்கிரஸ் மாநகர் மாவட்ட தலைவர் நவீன் குமார் முன்னெடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

#wayanad #Colacheltoday #nagercoil

தக்கலை: பெண்ணை காப்பாற்ற தன்னை பலி கொடுத்த இளைஞர்

திக்கணங்கோடு அருகே உள்ள மேக்கோடு பகுதியை சேர்ந்தவர் சுனில் ராஜ் (36). பெயின்டர். இவர் நேற்று முன்தினம் திக்கணங்கோட்டில் இருந்து திங்கள்சந...