ஞாயிறு, 26 ஜூலை, 2020

நாகர்கோவில், கருங்கல் பகுதிகளில் 28 இல் மின்தடை



நாகர்கோவில் பகுதியில் 28 இல் மின்தடை 

நாகர்கோவில் நகரப் பகுதியில் செவ்வாய்க் கிழமை ( ஜூலை 28 ) மின்தடை செய்யப்படுகிறது . இதுகுறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்ட செய்திக் குறிப்பு : 

நாகர்கோவில் துணை மின்நிலையத்தில் மாதாந்திர சிறப்பு பராமரிப்புப் பணிகள் செவ்வாய்க்கிழமை ( ஜூலை 28 ) நடைபெற உள்ளதால் , அன்று காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை இந்த மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும் வல்லன்குமாரன்விளை , தடிக்காரன்கோணம் , வடசேரி , ஆசாரிப்பள்ளம் துணை மின் நிலைய பகுதிகளிலும் , அதைச் சார்ந்துள்ள நாகர்கோவில் நகர்ப்பகுதி , பெருவிளை , சுங்கான்கடை வடசேரி கிருஷ்ணன் கோவில் , எஸ்.எம்.ரோடு , கல்லூரிச் சாலை , நீதிமன்றச் சாலை , கே.பி.ரோடு , பால்பண்ணை , நேசமணிநகர் , தோப்பூர் , வேம்பனூர் , அனந்தன்நகர் , பார்வதிபுரம் , புத்தேரி , இறச்சகுளம் ஆகிய பகுதிகளிலும் மின் விநியோகம் இருக்காது என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது ....
_________________________________________



குழித்துறை கோட்டத்திற்குட்பட்ட கருங்கல் துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நாளை மறுநாள்  (செவ்வாய்க்கிழமை ) நடக்கிறது . எனவே , அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கருங்கல் , பாலூர் , திப்பிறமலை , பூட்டேற்றி , கொட்டேற்றிகடை , தெருவுகடை , செந்தறை , மேல்மிடாலம் , மிடாலம் , நட்டாலம் , எட்டணி , இடவிளாகம் , பள்ளியாடி , பாரக்கடை , குழிக்கோடு , முருங்கவிளை , செல்லங்கோணம் , முள்ளங்கினாவிளை , கஞ்சிக்குழி , கருமாவிளை , படிவிளை , மானான்விளை , பெருமாங்குழி , ஓளிப்பாறை , மீறி , கல்லடை , ஹெலன்காலனி மற்றும் அவற்றை சார்ந்த துணை கிராமங்களுக்கும் மின் வினியோகம் இருக்காது . இந்த தகவலை குழித்துறை மின்வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார் .....


#ColachelToday
#Kanyakumari
#Powercut

சனி, 25 ஜூலை, 2020

குழித்துறை நகராட்சியில் முழு ஊராடங்கை அம்ல்படுத்த திமுக கோரிக்கை

குழித்துறை நகராட்சியில் முழு ஊராடங்கை அமல்படுத்த திமுக கோரிக்கை


குமரி மேற்கு மாவட்ட தி.மு.க அவைத் தலைவர் எம்.எஸ் பப்புசன் விடுத் துள்ள அறிக்கையில் கூறி யிருப்பதாவது : குழித்துறை நகராட்சி நாகர்கோவிலுக்கு அடுத்தபடியாக மிக பெரிய வணிக பகுதியாகும் . மிக பெரிய காய்கறி சந்தை , மீன் ஏல சந்தை , மிகப் பெரிய மால்கள் , வணிக நிறுவனங்கள் உள்ளடக்கிய பகுதியாகும் . தினமும் ஆயிரக்கணக்கானோர் பல்வேறு காரணங்களுக்காக இங்கு வந்து செல்கின்றனர் . 
கடந்த இரண்டு வார கால மாக குழித்துறை நகராட்சி பகுதியில் கொரோனா தொற்று சமூக பரவலாக மாறி வேகமாக பரவவருகிறது . பொது மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து கொரோனா தொற்றுக்கு சிகிச்சை எடுக்க முடியாமல் வறுமையில் உள்ளனர் . மாவட்ட நிர்வாகம் போர் கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து குழித்துறை அரசு மருத்துவமனையில் கொரோன பரிசோதனை மையம் அமைக்க வேண்டும் . குழித்துறை நகராட்சி பகுதில் சங்கிலி தொடர்பு தொற்று வேகமாக பரவுவதை தடுப்பதற்கு குழித்துறை நகராட்சி பகுதியில் மாவட்ட நிர்வாகம் உடனடியாக முழு ஊரடங்கை அமல்படுத்த வேண்டும் . இவ்வாறு அதில் கூறப்படுள்ளது 

#குழித்துறை #குமரி

செவ்வாய், 14 ஜூலை, 2020

மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் , நாகர்கோவில் பத்திரிக்கை செய்தி



14.07.2020 

✷காய்ச்சல் , இருமல் , சளி , மூச்சு விடுவதலில் சிரமம் போன்ற அறிகுறிகளில் ஏதேனும் ஒன்று காணப்பட்டாலும் பொதுமக்கள் தங்களை தாங்களே வீட்டில் தனிமைபடுத்திக்கொள்ள வேண்டும் . வெளியில் நடமாடுவதைத் தவிர்த்து அருகிலுள்ள அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் . கொரோனா நோய் பரவலை தடுக்க , பொதுமக்கள் தங்களின் ஒத்துழைப்பினை வழங்கி நோய் பரவலை தடுக்க மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து செயல்பட கேட்டுக்கொள்ளப்படுகிறது . 

✷கொரோனா பரவல் கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிகரித்திருப்பதைத் தொடர்ந்து மக்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வேண்டிய அவசியம் கருதி 01.07.2020 அன்று முதல் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கடைகள் அனைத்தும் ( ஹோட்டல்களும் மருந்து கடைகளும் தவிர்த்து ) காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை இயங்க அனுமதிக்கப்பட்டது . தொடர்ந்து அவ்வாறே அனைத்து கடைகளும் மாலை 5 மணி வரை செயல்படும் . பொதுமக்களும் , வணிக பெருமக்களும் மாவட்ட நிர்வாகத்திற்கு உரிய ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது . • 

✷ கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கோவிட் கவனிப்பு மையங்களில் ( Covid Care Centre ) நோய்த்தொற்று பாதித்தவர்களுக்கு உணவுப்பொருட்களுடன் மருத்துவ சிகிச்சையும் மாவட்ட நிர்வாகத்தால் வழங்கப்பட்டு வருகின்றன . 

✷முககவசம் அணியாமல் பொது வெளியில் நடமாடிய 60 பேருக்கு இன்று அபராதமாக ரூபாய் 6000 வசூலிக்கப்பட்டது . 

✷ கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆசாரிபள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும் , களபணியாளர்கள் மூலமாகவும் , சோதனைச்சாவடிகள் மூலமாகவும் 62059 நபர்கள் கொரோனா சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் . .

✷தற்போது கன்னியாகுமரி மாவட்டம் , ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 572 பேர் சிகிச்சையில் உள்ளனர் . • 

✷ கொரோனா நோய்த்தோற்றால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை மொத்தம் 721 பேர் முற்றிலும் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர் . -

✷ கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் மொத்தம் 4437 நபர்கள் வீட்டு தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளனர் . மேலும் வெளியூரிலிருந்து கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வந்த பயணிகளில் 4942 நபர்கள் வீட்டு தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளனர் . 

✷  ஊரடங்கு உத்தாவை மீறிய வகையில் மொத்தத்தில் இதுவரை 8524 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன . மேலும் ஊரடங்கு உத்தரவை மீறிய வகையில் 6341 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன ...

#Colacheltoday
#Kanniyakumari
#Kanyakumari
#Nagercoil

வியாழன், 9 ஜூலை, 2020

குமரி மாவட்ட ஆட்சியர் அவர்களின் செய்தி :



ஈரானிலிருந்து வந்த 535 நபர்கள் கன்னியாகுமரி மாவட்டத்தில் 6 தனிமைபடுத்தும் மையங்களில் தங்க வைக்கப்பட்டனர். 7 நாட்கள் தனிமைபடுத்தல் முடிந்து அரசு பேருந்து மூல அவரவர் இல்லங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதில் 5 நபர்களுக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர்.

வெளிநாடுகளில் இருந்து விமானம் மூலம் திருவனந்தபுரம் வந்து களியக்காவிளை சோதனை சாவடி வழியாக வருகின்ற பிறமாவட்டங்களை சேர்ந்த நபர்கள் அரசு பேருந்து மூலம் அந்தந்த
மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். 

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட மற்றும் அவர்களது சந்திப்பின் மூலம் கண்டறியப்பட்ட நபர்கள் பற்றிய விவரங்களை சேகரிக்க அரசு அலுவலர்கள் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டு தகவல்கள் தினசரி சேகரிக்கப்பட்டு வருகின்றன. 

தனிமைப்படுத்தல் முகாமிலிருந்து குணமாகி வீட்டு தனிமையில் இருப்பவர்கள் உடல் நலம் குறித்து விபரங்கள் சேகரிக்க தனி குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

முகக்கவசம் அணியாமல் பொது வெளியில் நடமாடிய 172 பேருக்கு இன்று அபராதமாக ரூபாய் 17200 வசூலிக்கப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆசாரிபள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில், களபணியாளர்கள் மூலமாகவும், சோதனைச்சாவடிகள் மூலமாகவும் 55692 நபர்கள் கொரோனா சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

 தற்போது கன்னியாகுமரி மாவட்டம், ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பேர் 439 சிகிச்சையில் உள்ளனர்.

கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை மொத்தம் 453 பேர் முற்றிலும் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் மொத்தம் 2954 நபர்கள் வீட்டு தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளனர். மேலும் வெளியூரிலிருந்து கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வந்த பயணிகளில் 5231 நபர்கள் வீட்டு தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளனர்

ஊரடங்கு உத்தரவை மீறி தலையில் மொத்தத்தில் இதுவரை 8507 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் ஊரடங்கு உத்தரவை மீறிய வகையில் 6328 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

#colacheltoday
#kanniyakumari
#kanyakumari

வெள்ளி, 3 ஜூலை, 2020

அரசின் அறிவுறுத்தலை கடைபிடிக்காமல் கடை அமைத்து வியாபாரம்.....

நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையத்தில் இயங்கிவந்த தற்காலிக சந்தையில் வியாபாரிகளுக்கு கொரோனா தோற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அங்கு பணியில் இருந்த அனைத்து வியாபாரிகளுக்கும் சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.....

பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட வியாபாரிகள் தங்களது வீடுகளில் 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ளும் படி அறிவுறுத்திய பிறகும்
வடசேரி சந்திப்பில்  பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட வியாபாரிகள் அரசின் அறிவுறுத்தலை கடைபிடிக்காமல் கடை அமைத்து வியாபாரம் செய்ததால் ஆணையர் திருமதி. ஆஷா அஜித் IAS அவர்களின் உத்தரவின் பேரில் மாநகராட்சி நல அலுவலர் டாக்டர் கிங்சால் அவர்கள் தலைமையில் மாநகராட்சி பணியாளர்கள் கடைகளை அப்புறப்படுத்தினர்...

மேலும் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட வியாபாரிகள் வீட்டில் தனிமையில் இல்லாமல் வெளியே நடமாடினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆணையர் எச்சரித்துள்ளார்......

தக்கலை: பெண்ணை காப்பாற்ற தன்னை பலி கொடுத்த இளைஞர்

திக்கணங்கோடு அருகே உள்ள மேக்கோடு பகுதியை சேர்ந்தவர் சுனில் ராஜ் (36). பெயின்டர். இவர் நேற்று முன்தினம் திக்கணங்கோட்டில் இருந்து திங்கள்சந...