சனி, 25 ஜூலை, 2020

குழித்துறை நகராட்சியில் முழு ஊராடங்கை அம்ல்படுத்த திமுக கோரிக்கை

குழித்துறை நகராட்சியில் முழு ஊராடங்கை அமல்படுத்த திமுக கோரிக்கை


குமரி மேற்கு மாவட்ட தி.மு.க அவைத் தலைவர் எம்.எஸ் பப்புசன் விடுத் துள்ள அறிக்கையில் கூறி யிருப்பதாவது : குழித்துறை நகராட்சி நாகர்கோவிலுக்கு அடுத்தபடியாக மிக பெரிய வணிக பகுதியாகும் . மிக பெரிய காய்கறி சந்தை , மீன் ஏல சந்தை , மிகப் பெரிய மால்கள் , வணிக நிறுவனங்கள் உள்ளடக்கிய பகுதியாகும் . தினமும் ஆயிரக்கணக்கானோர் பல்வேறு காரணங்களுக்காக இங்கு வந்து செல்கின்றனர் . 
கடந்த இரண்டு வார கால மாக குழித்துறை நகராட்சி பகுதியில் கொரோனா தொற்று சமூக பரவலாக மாறி வேகமாக பரவவருகிறது . பொது மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து கொரோனா தொற்றுக்கு சிகிச்சை எடுக்க முடியாமல் வறுமையில் உள்ளனர் . மாவட்ட நிர்வாகம் போர் கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து குழித்துறை அரசு மருத்துவமனையில் கொரோன பரிசோதனை மையம் அமைக்க வேண்டும் . குழித்துறை நகராட்சி பகுதில் சங்கிலி தொடர்பு தொற்று வேகமாக பரவுவதை தடுப்பதற்கு குழித்துறை நகராட்சி பகுதியில் மாவட்ட நிர்வாகம் உடனடியாக முழு ஊரடங்கை அமல்படுத்த வேண்டும் . இவ்வாறு அதில் கூறப்படுள்ளது 

#குழித்துறை #குமரி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தக்கலை: பெண்ணை காப்பாற்ற தன்னை பலி கொடுத்த இளைஞர்

திக்கணங்கோடு அருகே உள்ள மேக்கோடு பகுதியை சேர்ந்தவர் சுனில் ராஜ் (36). பெயின்டர். இவர் நேற்று முன்தினம் திக்கணங்கோட்டில் இருந்து திங்கள்சந...