வெள்ளி, 3 ஜூலை, 2020

அரசின் அறிவுறுத்தலை கடைபிடிக்காமல் கடை அமைத்து வியாபாரம்.....

நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையத்தில் இயங்கிவந்த தற்காலிக சந்தையில் வியாபாரிகளுக்கு கொரோனா தோற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அங்கு பணியில் இருந்த அனைத்து வியாபாரிகளுக்கும் சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.....

பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட வியாபாரிகள் தங்களது வீடுகளில் 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ளும் படி அறிவுறுத்திய பிறகும்
வடசேரி சந்திப்பில்  பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட வியாபாரிகள் அரசின் அறிவுறுத்தலை கடைபிடிக்காமல் கடை அமைத்து வியாபாரம் செய்ததால் ஆணையர் திருமதி. ஆஷா அஜித் IAS அவர்களின் உத்தரவின் பேரில் மாநகராட்சி நல அலுவலர் டாக்டர் கிங்சால் அவர்கள் தலைமையில் மாநகராட்சி பணியாளர்கள் கடைகளை அப்புறப்படுத்தினர்...

மேலும் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட வியாபாரிகள் வீட்டில் தனிமையில் இல்லாமல் வெளியே நடமாடினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆணையர் எச்சரித்துள்ளார்......

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தக்கலை: பெண்ணை காப்பாற்ற தன்னை பலி கொடுத்த இளைஞர்

திக்கணங்கோடு அருகே உள்ள மேக்கோடு பகுதியை சேர்ந்தவர் சுனில் ராஜ் (36). பெயின்டர். இவர் நேற்று முன்தினம் திக்கணங்கோட்டில் இருந்து திங்கள்சந...