செவ்வாய், 14 ஜூலை, 2020

மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் , நாகர்கோவில் பத்திரிக்கை செய்தி



14.07.2020 

✷காய்ச்சல் , இருமல் , சளி , மூச்சு விடுவதலில் சிரமம் போன்ற அறிகுறிகளில் ஏதேனும் ஒன்று காணப்பட்டாலும் பொதுமக்கள் தங்களை தாங்களே வீட்டில் தனிமைபடுத்திக்கொள்ள வேண்டும் . வெளியில் நடமாடுவதைத் தவிர்த்து அருகிலுள்ள அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் . கொரோனா நோய் பரவலை தடுக்க , பொதுமக்கள் தங்களின் ஒத்துழைப்பினை வழங்கி நோய் பரவலை தடுக்க மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து செயல்பட கேட்டுக்கொள்ளப்படுகிறது . 

✷கொரோனா பரவல் கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிகரித்திருப்பதைத் தொடர்ந்து மக்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வேண்டிய அவசியம் கருதி 01.07.2020 அன்று முதல் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கடைகள் அனைத்தும் ( ஹோட்டல்களும் மருந்து கடைகளும் தவிர்த்து ) காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை இயங்க அனுமதிக்கப்பட்டது . தொடர்ந்து அவ்வாறே அனைத்து கடைகளும் மாலை 5 மணி வரை செயல்படும் . பொதுமக்களும் , வணிக பெருமக்களும் மாவட்ட நிர்வாகத்திற்கு உரிய ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது . • 

✷ கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கோவிட் கவனிப்பு மையங்களில் ( Covid Care Centre ) நோய்த்தொற்று பாதித்தவர்களுக்கு உணவுப்பொருட்களுடன் மருத்துவ சிகிச்சையும் மாவட்ட நிர்வாகத்தால் வழங்கப்பட்டு வருகின்றன . 

✷முககவசம் அணியாமல் பொது வெளியில் நடமாடிய 60 பேருக்கு இன்று அபராதமாக ரூபாய் 6000 வசூலிக்கப்பட்டது . 

✷ கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆசாரிபள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும் , களபணியாளர்கள் மூலமாகவும் , சோதனைச்சாவடிகள் மூலமாகவும் 62059 நபர்கள் கொரோனா சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் . .

✷தற்போது கன்னியாகுமரி மாவட்டம் , ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 572 பேர் சிகிச்சையில் உள்ளனர் . • 

✷ கொரோனா நோய்த்தோற்றால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை மொத்தம் 721 பேர் முற்றிலும் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர் . -

✷ கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் மொத்தம் 4437 நபர்கள் வீட்டு தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளனர் . மேலும் வெளியூரிலிருந்து கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வந்த பயணிகளில் 4942 நபர்கள் வீட்டு தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளனர் . 

✷  ஊரடங்கு உத்தாவை மீறிய வகையில் மொத்தத்தில் இதுவரை 8524 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன . மேலும் ஊரடங்கு உத்தரவை மீறிய வகையில் 6341 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன ...

#Colacheltoday
#Kanniyakumari
#Kanyakumari
#Nagercoil

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தக்கலை: பெண்ணை காப்பாற்ற தன்னை பலி கொடுத்த இளைஞர்

திக்கணங்கோடு அருகே உள்ள மேக்கோடு பகுதியை சேர்ந்தவர் சுனில் ராஜ் (36). பெயின்டர். இவர் நேற்று முன்தினம் திக்கணங்கோட்டில் இருந்து திங்கள்சந...