புதன், 26 ஆகஸ்ட், 2020

இரண்டாம் நாளாக தொடர் உண்ணவிரதப் போராட்டம் நடத்திய இரையுமன்துறை மீனவர்கள்...

இரண்டாம் நாளாக தொடர் உண்ணவிரதப் போராட்டம் நடத்திய இரையுமன்துறை மீனவர்கள்...

தேங்காய்பட்டணம் மீன்பிடி ஹார்பாருக்கு செல்ல தாமிரபரணி ஆற்றின் கரையோரம் புதிதாக ரோடு அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி   இரையுமன்துறை  மீனவ கிராமத்தை சேர்ந்த மீனவ பொதுமக்கள் இரையுமன்துறை தேவலாயம் முன்பு கூடாரம் அமைத்து நேற்று முன் தினம் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் தொடங்கியுள்ளனர் 


உண்ணாவிரதத்த போரட்டத்துக்கு அனுமதி கொடுக்கபடாத நிலையில் ஆண்கள் , பெண்கள் என்று பல பேர் கலந்து கொண்டனர் . தகவல் அறிந்து வந்த அதிகாரிகள் இரண்டாம் கட்டமாக பேச்சுவார்த்தைகள் நடத்தினர் . இதில் முடிவுகள்  ஏற்படாததால் இரவிலும் தொடர்ந்து போராட்டம் நடந்தது . 


2 வது கட்ட பேச்சுவார்த்தையிலும் தீர்வு எட்டப்படாததால் , நேற்று 2 வது நாளாக போராட்டம் தொடர்ந்தது . நேற்றும் ஏராளமான ஆண்களும் , பெண்களும் போராட்டத்தில் கலந்து கொண்டனர் . போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர் . 



இந்த நிலையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட விஜயன் ( 48) , லீலஸ் ( 47 ) , பிறடி ( 54 ) ஆகிய மூன்று பேர் நேற்று மதியம் மயக்கமடைந்தனர் . 


அவர்களுக்கு அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் இருந்து மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு சிகிச்சையும் கொடுக்கப்பட்டது . 


#Thengapattanam #kanniyakumari 

ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2020

25 ஆம் தேதி மின் தடை பற்றிய அறிவிப்பு

மின்தடை நாகர்கோவில் மின்வாரிய செயற்பொறியாளர் ராஜசேகர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது : 
மீனாட்சிபுரம் , தெங்கம்புதூர் , கன்னியாகுமரி ஆகிய துணை மின்நிலையங்களில் வருகிற 25 ம் தேதி பராமரிப்பு பணி நடக்கிறது . 

இதனால் வடிவீஸ்வரம் , கோட்டார் , கணேசபுரம் , இடலாக்குடி , ஒழுகினசேரி , தளியபுரம் , ராஜபாதை , கரியமாணிக்கபுரம் , செட்டிக்குளம் சந்திப்பு , சரலூர் , ராமன் புதூர் சந்திப்பு , இந்துக்கல்லூரி , வேதநகர் , தெங்கம்புதூர் , பறக்கை , ஐஎஸ் இடி , மேலமணக்குடி , முகிலன்விளை , மணிக்கட்டிப்பொட்டல் , ஒசரவிளை , காட்டுவிளை , புதூர் , ஈத்தாமொழி , தர்மபுரம் , பழவிளை , பொட்டல் , வெள்ளாளன்விளை , மேலகிருஷ்ணன்புதூர் , பள்ளம் , பிள்ளையார்புரம் , புத்தளம் , புத்தன்துறை , கன்னியாகுமரி , கோவளம் , ராஜாவூர் , மைலாடி , வழுக்கம்பாறை , கீழ மணக்குடி , அழகப்பபுரம் , சுசீந்திரம் , கொட்டாரம் , சாமித்தோப்பு , அஞ்சுகிராமம் , கோழிக்கோட்டுப்பொத்தை , வாரியூர் ஆகிய பகுதிகளில் காலை 8 மணி முதல் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது .

#Kanniyakumari #Powercut #Colacheltoday 

திங்கள், 3 ஆகஸ்ட், 2020

மின் தடை அறிவிப்பு

தக்கலை மின்வாரிய செயற்பொறியாளர் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது : 

சேரமங்கலம் , செம்பொன்விளை , முட்டம் ஆகிய துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணி நாளை ( 4 ம் தேதி ) நடக்கிறது . 
நாளை காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை சேரமங்கலம் , அழகன்பாறை , கருமண்கூடல் , மண்டைக்காடு , லெட்சுமிபுரம் , நடுவூர்கரை , ஐ.ஆர்இ , பரப்பற்று , கூட்டு மங்கலம் , புதூர் , மணவாளக்குறிச்சி , பிள்ளையார்கோவில் , கடியப்பட்டணம் , அம்மாண்டிவிளை , வெள்ளமோடி , வெள்ளிச்சந்தை , முட்டம் , சக்கப்பத்து , ஆற்றின்கரை , சாத்தன் விளை , ஆலன் விளை , திருநைனார்குறிச்சி , குருந்தன்கோடு , கட்டிமாங்கோடு , செம்பொன்விளை , திக்கணங்கோடு , தெங்கன்குழி , மத்திகோடு , சாஸ்தான்கரை , சேனம்விளை , கொட்டில்பாடு , சைமன்காலனி , கீழக்கரை , குளச்சல் , மிடாலக்காடு , பிடாகை , கோடிமுனை , ஆலஞ்சி , குறும்பனை , வாணியக்குடி , பத்தறை , குப்பியன்தறை , பாலப்பள்ளம் , திங்கள்நகர் , இரணியல் , கண்டன்விளை , நெய்யூர் , பட்டரிவிளை , தலக்குளம் ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது .....

தக்கலை: பெண்ணை காப்பாற்ற தன்னை பலி கொடுத்த இளைஞர்

திக்கணங்கோடு அருகே உள்ள மேக்கோடு பகுதியை சேர்ந்தவர் சுனில் ராஜ் (36). பெயின்டர். இவர் நேற்று முன்தினம் திக்கணங்கோட்டில் இருந்து திங்கள்சந...