புதன், 26 ஆகஸ்ட், 2020

இரண்டாம் நாளாக தொடர் உண்ணவிரதப் போராட்டம் நடத்திய இரையுமன்துறை மீனவர்கள்...

இரண்டாம் நாளாக தொடர் உண்ணவிரதப் போராட்டம் நடத்திய இரையுமன்துறை மீனவர்கள்...

தேங்காய்பட்டணம் மீன்பிடி ஹார்பாருக்கு செல்ல தாமிரபரணி ஆற்றின் கரையோரம் புதிதாக ரோடு அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி   இரையுமன்துறை  மீனவ கிராமத்தை சேர்ந்த மீனவ பொதுமக்கள் இரையுமன்துறை தேவலாயம் முன்பு கூடாரம் அமைத்து நேற்று முன் தினம் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் தொடங்கியுள்ளனர் 


உண்ணாவிரதத்த போரட்டத்துக்கு அனுமதி கொடுக்கபடாத நிலையில் ஆண்கள் , பெண்கள் என்று பல பேர் கலந்து கொண்டனர் . தகவல் அறிந்து வந்த அதிகாரிகள் இரண்டாம் கட்டமாக பேச்சுவார்த்தைகள் நடத்தினர் . இதில் முடிவுகள்  ஏற்படாததால் இரவிலும் தொடர்ந்து போராட்டம் நடந்தது . 


2 வது கட்ட பேச்சுவார்த்தையிலும் தீர்வு எட்டப்படாததால் , நேற்று 2 வது நாளாக போராட்டம் தொடர்ந்தது . நேற்றும் ஏராளமான ஆண்களும் , பெண்களும் போராட்டத்தில் கலந்து கொண்டனர் . போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர் . 



இந்த நிலையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட விஜயன் ( 48) , லீலஸ் ( 47 ) , பிறடி ( 54 ) ஆகிய மூன்று பேர் நேற்று மதியம் மயக்கமடைந்தனர் . 


அவர்களுக்கு அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் இருந்து மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு சிகிச்சையும் கொடுக்கப்பட்டது . 


#Thengapattanam #kanniyakumari 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தக்கலை: பெண்ணை காப்பாற்ற தன்னை பலி கொடுத்த இளைஞர்

திக்கணங்கோடு அருகே உள்ள மேக்கோடு பகுதியை சேர்ந்தவர் சுனில் ராஜ் (36). பெயின்டர். இவர் நேற்று முன்தினம் திக்கணங்கோட்டில் இருந்து திங்கள்சந...