சனி, 3 ஆகஸ்ட், 2024

நாகர்கோவிலில் வயநாட்டில் உயிரிழந்த ஆத்மாக்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி கண்ணீர் அஞ்சலி

கேரள மாநிலம் வயநாடு பகுதிகளான மேப்பாடி,சூரல்மலை, முண்டகை, அட்டமலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவால் சுமார் 350 க்கு மேற்பட்டோர்
உயிரிழந்துள்ளனர்,
அந்த ஆன்மாக்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இன்று கன்னியாகுமரி மாவட்டம்
நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையம் முன்பு மாநகர மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில்,மாநகர மாவட்ட தலைவர் நவீன் குமார் தலைமையில் காங்கிரஸார் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி மவுன அஞ்சலி செலுத்தினர், இதில் ஏராளமான காங்கிரசார் கலந்து கொண்டனர், வயநாடு நிலச்சரிவில் உயிர் இழந்தவர்களுக்கு  அஞ்சலி செலுத்துவதில் முதல் நபராக,காங்கிரஸ் மாநகர் மாவட்ட தலைவர் நவீன் குமார் முன்னெடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

#wayanad #Colacheltoday #nagercoil

புதன், 31 ஜூலை, 2024

குமரியில் 2.8.24 அன்று மின்விநியோகம் நிறுத்தப்பட உள்ள பகுதிகள்

02.08.2024 (வெள்ளிக்கிழமை) அன்று காலை 08:00 மணி முதல் மாலை 2:00 மணி வரை நாகர்கோவில், வடசேரி, ஆசாரிபள்ளம் மற்றும் தடிகாரண்கோணம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள், மின் பாதைக்கு இடையூறாக உள்ள மரக்கிளைகளை அகற்றுதல், தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை சரி செய்தல் போன்ற பணிகள் மேற்கொள்ள இருப்பதால் கீழ்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
பார்வதிபுரம், கட்டையன்விளை, பெருவிளை,வெட்டூரிணிமடம், களியங்காடு, இறச்சகுளம், புத்தேரி, வீரநாரயணமங்கலம், கோதைகிராமம், வடசேரி, கிருஷ்ணகோவில், கோர்ட்ரோடு, ஆர்வீபுரம், ஆசாரிபள்ளம், தம்மத்துகோணம், அனந்தநாடர்குடி, மேலசங்கரன்குழி, வேம்பனூர், பெருஞ்செல்வவிளை , அருமநல்லூர், திடல், கீரிப்பாறை, அழகியபாண்டியபுரம், மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் ஆகும். எனவே பொதுமக்கள் சிரமத்தை பொறுத்துக்கொண்டு மின்சார வாரியத்திற்கு ஒத்துழைப்பு நல்கிட அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

அதே போல்


02.08.2024 (வெள்ளிக்கிழமை) அன்று காலை 08:00 மணி முதல் மாலை 2:00 மணி வரை வல்லன்குமாரவிளை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள்,
மின் பாதைக்கு இடையூறாக உள்ள மரக்கிளைகளை அகற்றுதல், தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை அகற்றுதல், தாழ்வாக செல்லும் மின் கம்பிகளை சரி செய்தல் போன்ற பணிகள் மேற்கொள்ள இருப்பதால் கீழ்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
கோணம், பீச்ரோடு, பள்ளம், இருளப்பபுரம், வல்லன்குமாரவிளை, கலைநகர், சைமன்நகர், பொன்னப்பநாடார் காலனி, என். ஜி. யோ காலனி, புன்னைநகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் ஆகும். அன்றைய தினம் பொதுமக்கள் சிரமத்தை பொறுத்துக் கொண்டு மின்சார வாரியத்திற்கு ஒத்துழைப்பு நல்கிட அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது.


#Nagercoil #kanniyakumari #powercut




புதன், 24 ஜூலை, 2024

குமரி மாவட்டத்தில் நாளை எங்கு எல்லாம் மின்தடை .

25.07.2024 (வியாழக்கிழமை) அன்று காலை 08:00 மணி முதல் மாலை 2:00 மணி வரை மீனாட்சிபுரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள்,மின்பாதைக்கு இடையூறாக உள்ள மரகிளைகளை அகற்றுதல், தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை சரி செய்தல் போன்ற பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் கீழ்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
மீனாட்சிபுரம், கோட்டார்,
வடிவீஸ்வரம், இடலாகுடி,செட்டிகுளம் சந்திப்பு , கணேசபுரம், வெள்ளாடிச்சிவிளை, கரியமாணிக்கபுரம், 
 ஓழுகினசேரி, ராஜாபாதை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் ஆகும்.


25.07.2024 (வியாழக்கிழமை) அன்று காலை 08:00 மணி முதல் 02:00 மணி வரை தெங்கம்புதூர் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள், மின்பாதைக்கு இடையூறாக உள்ள மரகிளைகளை அகற்றுதல், தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை சரி செய்தல் போன்ற பணிகள் மேற்கொள்ள இருப்பதால் தெங்கம்புதூர், பறக்கை, மேலமணக்குடி, முகிலன்விளை, மணிகட்டிபொட்டல், ஒசரவிளை, காட்டுவிளை, புதூர், பொட்டல், வெள்ளாளன்விளை, மேலகிருஷ்ணன்புதூர், புத்தளம், பள்ளம், புத்தன்துறை மற்றும் இதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படும் என தெரிவித்து கொள்கிறோம்.


#Powercut #kanniyakumari #nagercoil
#Colacheltoday

வியாழன், 18 ஜூலை, 2024

தோவாளை மலர் சந்தையில் பூக்களின் விலை உயர்வு

ஆடி மாத பிறப்பை ஒட்டி கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை மலர் சந்தையில் பூக்களின் விலை உயரத் தொடங்கியுள்ளது- நாளை ஆடி முதல் வெள்ளி என்பதால் பூக்களை வாங்க வியாபாரிகள் சந்தையில் குவிந்துள்ளனர்- மல்லிகைப்பூ கிலோ ரூபாய் 400க்கும்,பிச்சி பூ கிலோ 250 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது


பூக்களின் வரத்து அதிகரித்துள்ளதாலும் உற்பத்தி பெருகி உள்ளதாலும் ஆடி மாதம் எதிர்பார்த்த விலை உயர வில்லை,இன்னும் நாட்கள் செல்லச் செல்ல பூக்களின் விலை உயரும் என பூ வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்- இதில் அரளிப்பூ கிலோ 120 ரூபாய்க்கும், கனகாம்பரம் 125 ரூபாய்க்கும், வாடாமல்லி 40 ரூபாய்க்கும்,சிவப்பு கிரேந்தி 60 ரூபாய்க்கும், சம்பங்கி ரூ 20 க்கும் விற்பனை செய்யப்படுகிறது மேலும் இந்த வண்ண பூக்களின் விலையில் எந்த மாற்றமும் இல்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

புதன், 17 ஜூலை, 2024

19, 20 தேதிகளில் குமரியில் எங்கெல்லாம் மின் தடை

தேங்காய்ப்பட்டணம், முன்சிறை, நடைக்காவு பகுதியில் 19.7.2024 வெள்ளிக்கிழமை 
மின்தடை

முஞ்சிறை,காப்புக்காடு, விரிவிளை, நித்திரவிளை, புதுக்கடை, ஐரேனிபுரம், தொலையாவட்டம், மாங்கரை, விழுந்தயம்பலம், வேங்கோடு, மாதாபுரம், அரசகுளம்,பைங்குளம், தேங்காய்ப்பட்டணம், இராமன்துறை, புத்தன் துறை, இனயம், கிள்ளியூர், கீழ்குளம் சென்னித்தோட்டம், ஆகிய இடங்களுக்கும் ஆகிய இடங்களுக்கும் அவற்றை சார்ந்த துணை கிராமங்களுக்கும் மேற்படி துணை மின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் இருக்காது.

இதேபோன்று நடைக்காவு துணை மின் நிலையத்திலிருந்து மின்னூட்டம் பெறும் 
நடைக்காவு , சூரியகோடு, குளப்புறம், சுந்தரவனம், மங்காடு, வாறுத்தட்டு, குழிவிளை, கோழிவிளை, கோணசேரி, சாத்தன்கோடு, வாவறை, மணலி, பாலவிளை, வளனூர், சூழால், பாத்திமாநகர், மெதுகும்மல், வெங்கஞ்சி, பூத்துறை, தூத்தூர், கொல்லங்கோடு, கிராத்தூர் ஆகிய இடங்களுக்கும் அவற்றை சார்ந்த துணை கிராமங்களுக்கும் அன்றைய தினம் காலை 8 மணி முதல் மதியம் 2மணி வரை மேற்படி துணை மின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் இருக்காது.




மார்த்தாண்டம் பகுதியில் 20.7.2024 சனிக்கிழமை 
மின் தடை 

 மார்த்தாண்டம், காஞ்சிரகோடு, விரிகோடு, கொல்லஞ்சி, மாமூட்டுக்கடை, காரவிளை, உண்ணாமலைக்கடை, ஆயிரம்தெங்கு, பயணம், திக்குறிச்சி, ஞாறான்விளை, பேரை, நல்லூர், வெட்டுவெந்நி ஆகிய இடங்களுக்கும் அவற்றைச் சார்ந்த துணை கிராமங்களுக்கும் அன்றைய தினம் காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

சனி, 13 ஜூலை, 2024

கன்னியாகுமரி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் வைத்து காவலர்களுக்கு ஆயுதப்பயிற்சி



மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.E.சுந்தரவதனம் IPS அவர்கள் தலைமையில் ஆயுதப்படை காவலர்களுக்கு வாரந்திர கவாத்து  கன்னியாகுமரி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் வைத்து  இன்று (13/07/2024) நடைபெற்றது.

 இதில் காவலர்களுக்கு ஆயுதங்களின் செயல்பாடு குறித்தும் அதனை சிறப்பாக கையாள்வது குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது.  மேலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் காவலர்களின் குறைகளை கேட்டறிந்து  உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்கள். 

 இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் மற்றும் காவல்துறை துணை கண்காணிப்பாளர் திரு. செந்தாமரை கண்ணன் குற்றப்பிரிவு (ஆயுதப்படை பொறுப்பு) மற்றும் திரு. செல்லசுவாமி ஆயுதப்படை உதவி ஆய்வாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

வெள்ளி, 12 ஜூலை, 2024

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவில் மாவட்ட முழுவதும் அனைத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தீவிர வாகன சோதனை

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவில் மாவட்ட முழுவதும் அனைத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட  பகுதிகளில் தீவிர வாகன சோதனை

கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் *திரு. சுந்தரவதனம்  IPS அவர்கள்* உத்தரவில்  கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

 இந்த தீவிர வாகன சோதனையானது தடை செய்யப்பட்ட போதை பொருட்கள், தவறான நோக்கத்துடன் ஆயுதங்கள் வைத்திருத்தல்,  மேலும் போக்குவரத்து விதிகளை பின்பற்றாமல் வாகனம் ஓட்டுதல்  ஆகியவை சம்பந்தமாக  மாவட்டத்தின் அனைத்து உட்கோட்ட மற்றும் காவல் நிலைய எல்லை பகுதிகளில் நடைபெற்று வருகிறது.

  வாகன சோதனையில் வாகன ஓட்டுனரின் மற்றும் வாகனத்தின் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு, அவர்கள் அரசால் தடை செய்யப்பட்ட பொருட்கள் ஏதேனும் வைத்துள்ளார்களா என  சோதனை இடப்பட்டு அனுப்பப்படுகின்றனர்.

தக்கலை: பெண்ணை காப்பாற்ற தன்னை பலி கொடுத்த இளைஞர்

திக்கணங்கோடு அருகே உள்ள மேக்கோடு பகுதியை சேர்ந்தவர் சுனில் ராஜ் (36). பெயின்டர். இவர் நேற்று முன்தினம் திக்கணங்கோட்டில் இருந்து திங்கள்சந...