சனி, 13 ஜூலை, 2024

கன்னியாகுமரி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் வைத்து காவலர்களுக்கு ஆயுதப்பயிற்சி



மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.E.சுந்தரவதனம் IPS அவர்கள் தலைமையில் ஆயுதப்படை காவலர்களுக்கு வாரந்திர கவாத்து  கன்னியாகுமரி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் வைத்து  இன்று (13/07/2024) நடைபெற்றது.

 இதில் காவலர்களுக்கு ஆயுதங்களின் செயல்பாடு குறித்தும் அதனை சிறப்பாக கையாள்வது குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது.  மேலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் காவலர்களின் குறைகளை கேட்டறிந்து  உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்கள். 

 இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் மற்றும் காவல்துறை துணை கண்காணிப்பாளர் திரு. செந்தாமரை கண்ணன் குற்றப்பிரிவு (ஆயுதப்படை பொறுப்பு) மற்றும் திரு. செல்லசுவாமி ஆயுதப்படை உதவி ஆய்வாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தக்கலை: பெண்ணை காப்பாற்ற தன்னை பலி கொடுத்த இளைஞர்

திக்கணங்கோடு அருகே உள்ள மேக்கோடு பகுதியை சேர்ந்தவர் சுனில் ராஜ் (36). பெயின்டர். இவர் நேற்று முன்தினம் திக்கணங்கோட்டில் இருந்து திங்கள்சந...