சனி, 24 ஆகஸ்ட், 2024
பெண் கடத்தி கொலை: கணவரின் தம்பிக்கு ஆயுள் தண்டனை
வியாழன், 22 ஆகஸ்ட், 2024
கன்னியாகுமரி கடலில் செத்து மிதந்த மீன்கள்
கன்னியாகுமரியில் கடந்த சில நாட்களாக கடல் ஒரு பறம் சீற்றமாகவும் மறுபுறம் உள்வாங்கியும் காணப்பட்டது. இதற்கிடையில் மாவட்டத்தில் ஆங்காங்கே பெய்த மழையின் காரணமாக கடலில் மழை வெள்ளம் வந்து கலந்தபடி இருந்தது. இதனால் கடலின் நிறமே மாறி செம்மண் கலந்தது போன்று சிகப்பு நிறத்தில் தென்பட்டது
மேலும் கடல் நீரும் கடுமையான குளிராக இருந்தது. இந்த காலநிலை மாற்றத்தின் காரணமாக கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி
குமரி லாட்ஜில் தங்கியிருந்த சிறுமிகளுக்கு மருத்துவ பரிசோதனை கைது செய்ப்பட்ட மாணவர் மேலாளருக்கு ஜெயில்
சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் உள்ள ஒரு லாட்ஜில் நேற்று இரவு வாலிபர் ஒருவர் 2 சிறுமிகள் மற்றும் ஒரு சிறுவனுடன் அறை எடுத்து தங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் கன்னியாகுமரி போலீசார் அங்கு சென்று அதிரடி சோதனை நடத்தி 2 சிறுமிகள் உள்பட 4 பேரையும் மீட்டு கன்னியாகுமரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச்
சென்று விசாரணை நடத்தினார்கள்.
இதில் அவர்கள் நான்கு பேரும் தூத்துக்குடியை சேர்ந்தவர்கள் என்பத இரண்டு சிறுமிகளும், சிறுவனும் 17 வயதுடையவர்கள் என்பதும் இவர்கள் தனியார் தொழில் பயிற்சி நிலையத்தில் படித்து வருவதும் தெரியவந்தது. அவர்களுடன் இருந்த வாலிபர் கல்லூரி மாணவர் என்றும் அவரது பெயர் சந்தீஷ்குமார் (வயது 22) என்பதும் விசாரணையில் தெரியவந்தது.
இவர்கள் காதல் ஜோடி என
போலீசாரிடம் தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து சந்தீஷ்குமார், லாட்ஜ் உரிமையாளர் பால்ராஜ் (62), மேலாளர் சிவன் (54) ஆகியோரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவர்களையும் 17 வயது சிறுவனையும் போலீசார் நாகர்கோவில் கோர்ட்டில் ஆஜர் செய்தனர். இதில் லாட்ஜ் உரிமையாளர் பால்ராஜ் வயது முதிர்வு மற்றும் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். மற்ற 3 பேரையும் காவலில் வைக்கும்படி மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து அவர்கள் 3 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதற்கிடையில் அவர்களுடன் தங்கியிருந்த இரண்டு மாணவிகளும் மருத்துவ பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
விதிகளை மீறி கல் குவாரிக்கு உரிமம் வழங்கியுள்ளனர்: கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகத்துக்கு ரூ.10 லட்சம் அபராதம் மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
விதிகளை மீறி கல் குவாரிக்கு அனுமதி வழங்கிய விவகாரத்தில் கன்னியகுமரி மாவட்ட நிர்வாகத்துக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதித்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ரமேஷ் வர்கிஸ், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:
குமரி மாவட்டம் கல்குளம் வட்டம் கப்பியறை கிராமத்தில் 2018-ம் ஆண்டு முதல் 2023-ம் ஆண்டு வரை கல் குவாரி நடத்த அதிகாரிகள் அனுமதி அளித்தனர். இந்நிலையில் கன்னியாகுமாரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விதிகளை மீறி கல்குவாரிகள் செயல்படுவதாக பலர், மதுரை ஐகோர்ட்டில் பொது நல வழக்குகளை தாக்கல் செய்தனர்.
அவற்றை விசாரித்த ஐகோர்ட்டு. கல்குவாரிகளை அதிகாரிகள் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யும்படி உத்தரவிட் டது. இதையடுத்து எனது கல் குவாரியில் ஆய்வு செய்த அதிகாரிகள், குடியிருப்பு பகுதியில் இருந்து 300 மீட்டருக்குள் குவாரி அமைந்து இருப்பதாக அறிக்கை அளித்து, என்னுடைய குவாரி உரிமத்தை (லைசன்ஸ்) ரத்து செய்தனர். இந்த உத்தரவுக்கு தடை விதித்து மீண்டும் உரிமம் வழங்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி புகழேந்தி பிறப்பித்த உத்தரவு வருமாறு:-
மனுதாரருக்கு கல் குவாரி உரிம சான்றிதழ் வழங்குவதற்கு முன்பே அந்த பகுதியில் 10 வீடுகள் உள்ளன என்று 2011-
ஆண்டில் வருவாய் கேட்டாட்சியர், கனிமவள உதவி இயக்குனர் உள்ளிட்ட அதிகாரிகள் அறிக்கை அளித்து உள்ள னர். 2015-ம் ஆண்டில் அந்த கட்டிடங்கள் அனைத்தும் பண்ணை வீடுகள்தான் என அப்போதைய கனிமவள உதவி இயக்குனர் சான்றிதழ் வழங்கியுள்ளார். அதன்பேரில் எந்திரத்தனமாக குவாரிக்கு உரிமம் வழங்கப்பட்டு இருக்கிறது.
எனவே அங்கு குவாரி தொடர்ந்து செயல்படுவதை அனுமதிக்க முடியாது.
மனுதாரரின் கல்குவாரிக்கு வழங்கப்பட்ட உரிமத்தை ரத்து செய்த அதிகாரிகளின் நடவடிக்கையில் கோர்ட்டு தலையிட விரும்பவில்லை. அதேநேரம் மனுதாரரின் கல் குவாரிக்கு வழங்கப்பட்ட உரிமம் ரத்து செய்யப்பட்டதால், பெரும் பொரு ளாதார பாதிப்பை அவர் சந்தித்து உள்ளார். அதிகாரிகள் வேண்டுமென்றே தவறு செய்ததால், மனுதாரருக்கு அவர்கள்
இழப்பீட்டை வழங்குவது அவசியம்.
எனவே கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகத்திற்கு ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த தொகையை மனுதார ருக்கு இழப்பீடாக 4 வாரத்தில் வழங்க வேண்டும். இந்த தொகையை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் இருந்து தமிழக அரசு வசூலித்துக்கொள்ளலாம்.
இந்த வழக்கில் தவறு செய்த அப்போதைய கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் மீது தமிழக அரசு துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். எதிர்காலத்தில் இதுபோன்ற விதிமீறல்கள் நடக்காதவண்ணம் அதிகாரிகள் கவனமாக செயல்பட வேண்டும்.
இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.
கடலில் பலத்த காற்று: படகில் தவறி விழுந்த தூத்தூர் மீனவர் பலி
குமரி மாவட்டம் நித்திரவிளை அருகே தூத்தூர் பகுதியை சேர்ந்தவர் ஷாஜி (50). மீன்பிடி
தொழிலாளியான இவர் நேற்று முன்தினம் மாலை பூத்துறை என்ற பகுதியை சேர்ந்த ஜோன் பிராய்
என்பவருக்கு சொந்தமான படகில் தேங்காப்பட்டணம் துறைமுகத்திலிருந்து மீன் பிடிக்க
சென்றார்.
இவருடன் ஜான் உட்பட எட்டு மீனவர்கள் உடன் இருந்தனர். நேற்று அதிகாலையில் ஆழ்கடல்
பகுதியில் இவர்கள் மீன் பிடித்துக் கொண்டு இருந்தனர். அப்போது ஆழ்
கடலில் பலத்த காற்று வீசி உள்ளது. அப்போது நிலை தடுமாறியதில் ஷாஜி படகின் உள்ளே
விழுந்துள்ளார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே
உயிரிமந்துள்ளார். சக மீனவர்கள் ஷாஜியின் உடலை தேங்காபட்டணம் மீன்பிடித்
துறைமுகத்திற்கு கொண்டு வந்து சேர்த்தனர். தகவல் அறிந்து சம்பவ இடம் வந்த குளச்சல்
கடலோர காவல் படை போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு
ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
புதன், 21 ஆகஸ்ட், 2024
சிறுமி மாயம் குமரி ரயில் நிலையங்களில் தேடுதல்
அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர் அன்வர் உசேன். சென்ற மாதம் குடும்பத்துடன் திருவனந்தபுரம் வந்து வாடகை வீட்டில் வசித்து வருகிறார். மனைவி மற்றும் 13 வயதான தஸ்மிக் தம்சம் என்ற மகள் உட்பட 3 குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.
அன்வரும் மனைவியும் தினமும் காலையிலேயே கூலி வேலைக்கு சென்று வந்தனர். நேற்று காலை தஸ்மீ க் தம்சத்தை வீட்டில் இருந்து காணவில்லை. இது குறித்து அன்வர் உசேன் கழக்கூட்டம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு செய்து விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில் தஸ்மிக் திருவனந்தபுரத்தில் இருந்து ரயிலில்
கன்னியாகுமரி ரயில் பயணம் செய்ததாக தகவல் கிடைத்தது. அவர் ரயிலில் இருப்பது போன்ற ஒரு போட்டோ போலீசில் கிடைத்தது.தொடர்ந்து கழக்கூட்டம் போலீசார் இன்று கன்னியாகுமரிக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்
அதன் பேரில் இன்று காலையில் கேரளாவில் இருந்து கன்னியாகுமரிக்கு தனிப்படை போலீசார் வந்து கன்னியாகுமரி ரயில் நிலையம் மற்றும் அனைத்து பகுதிகளிலும் சிறுமியின் புகைப்படத்தை காட்டி விசாரித்தனர். மேலும் தொடர்ந்து கேரளா போலீசார் அங்கு முகாமிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்
குளச்சலில் கல்லூரி கட்டணம் செலுத்த முடியாத மாணவர் தற்கொலை
தூத்துக்குடி பெரியதாழை பகுதி சேர்ந்தவர் அலோசியஸ் மனைவி அஜிஸ்ரேகா (42). கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் அலோசியஸ் உடல்நிலை சரியில்லாமல் உயிரிழந்தார். குடும்ப வறுமை காரணமாக அஜீஸ் ரேகா தனது மகன்களுடன் தற்போது குமரி மாவட்டம் குளச்சல் பகுதியில் வாடகைக்கு வசித்து வருகிறார்.
இவரது மூத்த மகன் ஜாக்சன் டியூக் (17) தக்கலை அருகில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் சேர்த்துள்ளார். அடுத்த வாரம் கல்லூரி திறக்க உள்ள நிலையில் கல்லூரி கட்டணம் செலுத்த முடியவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் கல்லூரிக்கு செல்ல முடியாது என்ற ஏக்கத்தில் ஜாக்சன் டியூக் இருந்து வந்துள்ளார்.
சம்பவத்தன்று இரவு ஜாக்சனின் பள்ளி தோழி ஒருவர் அஜீஸ் ரேகாவை செல்போனில் தொடர்பு கொண்டு, ஜாக்சன் தன்னிடம் வீடியோ காலில், கல்லூரி கட்டணம் செல்ல முடியாததால் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக கூறி அழைப்பை துண்டித்ததாக கூறியுள்ளார்.
தாயார் அறையில் சென்று பார்த்த போது, அறை பூட்டப்பட்டிருந்தது. ஜன்னல் வழியே பார்த்த போது அவர் அறையில் உள்ள மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார்.
அக்கம்பக்கத்தினர் கதவை உடைத்து குளச்சல் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதனை டாக்டர்கள் ஜாக்சன் இறந்ததாக தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து
குளச்சல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)
தக்கலை: பெண்ணை காப்பாற்ற தன்னை பலி கொடுத்த இளைஞர்
திக்கணங்கோடு அருகே உள்ள மேக்கோடு பகுதியை சேர்ந்தவர் சுனில் ராஜ் (36). பெயின்டர். இவர் நேற்று முன்தினம் திக்கணங்கோட்டில் இருந்து திங்கள்சந...
-
திக்கணங்கோடு அருகே உள்ள மேக்கோடு பகுதியை சேர்ந்தவர் சுனில் ராஜ் (36). பெயின்டர். இவர் நேற்று முன்தினம் திக்கணங்கோட்டில் இருந்து திங்கள்சந...
-
குமரி மாவட்டம், குளச்சல் மீன்பிடி துறைமுக விரிவாக்கத்திற்கான இடத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர். அழகுமீனா, நேரில் ஆய்வு மேற்கொண்டு தெரிவ...
-
தக்கலையில் கணவனை உதறிவிட்டு கள்ள காதலனுடன் சென்ற இளம்பெண்




