புதன், 21 ஆகஸ்ட், 2024

சிறுமி மாயம் குமரி ரயில் நிலையங்களில் தேடுதல்

அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர் அன்வர் உசேன். சென்ற மாதம் குடும்பத்துடன் திருவனந்தபுரம் வந்து வாடகை வீட்டில் வசித்து வருகிறார். மனைவி மற்றும் 13 வயதான தஸ்மிக் தம்சம் என்ற மகள் உட்பட 3 குழந்தைகளுடன் வசித்து வருகிறார். அன்வரும் மனைவியும் தினமும் காலையிலேயே கூலி வேலைக்கு சென்று வந்தனர். நேற்று காலை தஸ்மீ க் தம்சத்தை வீட்டில் இருந்து காணவில்லை. இது குறித்து அன்வர் உசேன் கழக்கூட்டம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு செய்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில் தஸ்மிக் திருவனந்தபுரத்தில் இருந்து ரயிலில் கன்னியாகுமரி ரயில் பயணம் செய்ததாக தகவல் கிடைத்தது. அவர் ரயிலில் இருப்பது போன்ற ஒரு போட்டோ போலீசில் கிடைத்தது.
தொடர்ந்து கழக்கூட்டம் போலீசார் இன்று கன்னியாகுமரிக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர் அதன் பேரில் இன்று காலையில் கேரளாவில் இருந்து கன்னியாகுமரிக்கு தனிப்படை போலீசார் வந்து கன்னியாகுமரி ரயில் நிலையம் மற்றும் அனைத்து பகுதிகளிலும் சிறுமியின் புகைப்படத்தை காட்டி விசாரித்தனர். மேலும் தொடர்ந்து கேரளா போலீசார் அங்கு முகாமிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தக்கலை: பெண்ணை காப்பாற்ற தன்னை பலி கொடுத்த இளைஞர்

திக்கணங்கோடு அருகே உள்ள மேக்கோடு பகுதியை சேர்ந்தவர் சுனில் ராஜ் (36). பெயின்டர். இவர் நேற்று முன்தினம் திக்கணங்கோட்டில் இருந்து திங்கள்சந...