வியாழன், 22 ஆகஸ்ட், 2024

கன்னியாகுமரி கடலில் செத்து மிதந்த மீன்கள்


கன்னியாகுமரியில் கடந்த சில நாட்களாக கடல் ஒரு பறம் சீற்றமாகவும் மறுபுறம் உள்வாங்கியும் காணப்பட்டது. இதற்கிடையில் மாவட்டத்தில் ஆங்காங்கே பெய்த மழையின் காரணமாக கடலில் மழை வெள்ளம் வந்து கலந்தபடி இருந்தது. இதனால் கடலின் நிறமே மாறி செம்மண் கலந்தது போன்று சிகப்பு நிறத்தில் தென்பட்டது


மேலும் கடல் நீரும் கடுமையான குளிராக இருந்தது. இந்த காலநிலை மாற்றத்தின் காரணமாக கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி



சங்கமம் சங்கிலித் துறை கடலில் ஏராளமான மீன்கள் செத்து மிதந்தன. குறிப்பாக “மழுவம்" வகை மீன் அதிக அளவில் செத்து மிதந்தது. ஆழ் கடலிலும் அதிகமான மீன்கள் செத்து மிதந்ததாக கடலுக்கு மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் கரைக்கு திரும்பி வந்த போது தெரிவித்தனர்.



நடுக் கடலில் செத்து மிதந்த இந்த மீன்கள் நேரம் செல்ல செல்ல கரையில் வந்து ஒதுங்கி கிடந்தன. முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடற்கரை பகுதியில் ஏராளமான மீன்கள் செத்து கரை ஒதுங்கி கிடந்தன. இந்த மீன்களை பலரும் அள்ளிச் சென்றனர். சுற்றுலா பயணிகள் தங்களது

 







மொபைல் போன்களில் புகைப்படம் எடுத்தபடி இருந்தனர். தொடர்ந்து மீன்கள் செத்து மிதந்து கரை ஒதுங்கியதால் கடலில் ஏதோ ஆபத்து நிகழப் போகிறதோ? என்று மீனவர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அச்சமடைந்தனர்.


கடற்கரையில் மீன்கள் “திடீர்”என்று செத்து ஒதுங்கியதால் சுற்று வட்டார பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தக்கலை: பெண்ணை காப்பாற்ற தன்னை பலி கொடுத்த இளைஞர்

திக்கணங்கோடு அருகே உள்ள மேக்கோடு பகுதியை சேர்ந்தவர் சுனில் ராஜ் (36). பெயின்டர். இவர் நேற்று முன்தினம் திக்கணங்கோட்டில் இருந்து திங்கள்சந...