சனி, 13 ஜூலை, 2024

கன்னியாகுமரி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் வைத்து காவலர்களுக்கு ஆயுதப்பயிற்சி



மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.E.சுந்தரவதனம் IPS அவர்கள் தலைமையில் ஆயுதப்படை காவலர்களுக்கு வாரந்திர கவாத்து  கன்னியாகுமரி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் வைத்து  இன்று (13/07/2024) நடைபெற்றது.

 இதில் காவலர்களுக்கு ஆயுதங்களின் செயல்பாடு குறித்தும் அதனை சிறப்பாக கையாள்வது குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது.  மேலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் காவலர்களின் குறைகளை கேட்டறிந்து  உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்கள். 

 இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் மற்றும் காவல்துறை துணை கண்காணிப்பாளர் திரு. செந்தாமரை கண்ணன் குற்றப்பிரிவு (ஆயுதப்படை பொறுப்பு) மற்றும் திரு. செல்லசுவாமி ஆயுதப்படை உதவி ஆய்வாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

வெள்ளி, 12 ஜூலை, 2024

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவில் மாவட்ட முழுவதும் அனைத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தீவிர வாகன சோதனை

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவில் மாவட்ட முழுவதும் அனைத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட  பகுதிகளில் தீவிர வாகன சோதனை

கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் *திரு. சுந்தரவதனம்  IPS அவர்கள்* உத்தரவில்  கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

 இந்த தீவிர வாகன சோதனையானது தடை செய்யப்பட்ட போதை பொருட்கள், தவறான நோக்கத்துடன் ஆயுதங்கள் வைத்திருத்தல்,  மேலும் போக்குவரத்து விதிகளை பின்பற்றாமல் வாகனம் ஓட்டுதல்  ஆகியவை சம்பந்தமாக  மாவட்டத்தின் அனைத்து உட்கோட்ட மற்றும் காவல் நிலைய எல்லை பகுதிகளில் நடைபெற்று வருகிறது.

  வாகன சோதனையில் வாகன ஓட்டுனரின் மற்றும் வாகனத்தின் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு, அவர்கள் அரசால் தடை செய்யப்பட்ட பொருட்கள் ஏதேனும் வைத்துள்ளார்களா என  சோதனை இடப்பட்டு அனுப்பப்படுகின்றனர்.

அண்ணாமலையை கண்டித்து நாகர்கோவிலில் காங்கிரஸ் கட்சி ஆர்பாட்டம்

பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை கண்டித்து குமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகர காங்கிரஸ் கட்சி சார்பில் வேப்பமூடு பூங்கா முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் எம் பி,எம் எல் ஏ பங்கேற்பு.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப் பெருந்தகை குறித்து அவதூறு பரப்பும் வகையிலும் பொய்யான தகவல்கள் கூறி வருகிறார் அவரது செயலை கண்டிக்கும் விதமாக தமிழக முழுவதும் காங்கிரஸார் அண்ணாமலையின் புகைப்படம் எரிப்பு கிளிப்பு என எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர், 

அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகர காங்கிரஸ் கட்சி சார்பில் மாநகர மாவட்ட தலைவர்.நவீன்குமார் குமார் தலைமையில் அண்ணாமலையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது,இந்த ஆர்ப்பாட்டத்தில் கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர்.எம் பி விஜயசந்த்விளவங்கோடு சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏ தாரகை கட்பர்ட் உள்ளிட்ட ஏராளமான காங்கிரஸார் கலந்து கொண்டு அண்ணாமலை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.

திங்கள், 8 ஜூலை, 2024

கன்னியாகுமரியில் பேரிடர் காலத்தில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை கொடுக்கும் வசதியுடன் கூடிய புறக்காவல் நிலையம் திறப்பு



கன்னியாகுமரி திரிவேணி சங்கமம் கடற்கரைப்பகுதியில் புதிதாக மாவட்டக் காவல்துறையால் அமைக்கப்பட்ட புறக்காவல் நிலையத்தை இன்று (08.07.2024) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் *திரு.E. சுந்தரவதனம் IPS* அவர்கள் திறந்து வைத்தார்.

 புதிதாக அமைக்கப்பட்ட புறக்காவல் நிலையத்தில் கடற்கரைக்கு வரும் பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் விதத்தில், 24 மணி நேரமும் கண்காணிக்கும் வகையில் 34 CCTV கேமராக்கள் பொருத்தப்பட்டு அதனை புறக்காவல் நிலையத்தில் கண்காணிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
பேரிடர் காலங்கள் மற்றும் கடல் சீற்ற காலங்களில் கடற்கரையில் இருக்கும் பொதுமக்களை எச்சரிக்கை செய்து, பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தும் வண்ணம் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில் கன்னியாகுமரி உட்கோட்ட காவல்துணை கண்காணிப்பாளர் திரு. மகேஷ் குமார், கன்னியாகுமரி காவல் நிலைய ஆய்வாளர் திரு. நெப்போலியன், கன்னியாகுமரி போக்குவரத்து ஒழுங்கு பிரிவு ஆய்வாளர் திரு. பிரபு மற்றும் காவலர்கள் கலந்து கொண்டனர்.

#KanniyakumariDistrictPolice 
#szsocialmedia1 
#tamilnadupolice 
#TruthAloneTriumphs #kanniyakumari
#Colacheltoday 

ஞாயிறு, 7 ஜூலை, 2024

கன்னியாகுமரி மாவட்ட குளங்களிலிருந்து மண் எடுக்க அனுமதி



கன்னியாகுமரிமாவட்ட பொதுப்பணித்துறை,நீர்வள ஆதார துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 417 குளங்கள் மற்றும் ,பஞ்சாயத்துதுறை  ஊரக வளர்ச்சித்துறை  கட்டுப்பாட்டில் உள்ள 192 குளங்கள் மொத்தம் 609 குளங்களிலிருந்து இலவச மண் எடுக்க அனுமதி வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளதாக குமரி மாவட்ட ஆட்சி தலைவர்  ஶ்ரீதர் தகவல் தெரிவித்துள்ளார்,      

இதற்கு தாசில்தார் அனுமதி பெற வேண்டும். அதன் பிறகு சம்மந்தப்பட்ட நீர்நிலைகளின் கட்டுப்பாட்டு அலுவலர் முன்னிலையில் வண்டல்மண் மற்றும் களிமண் இலவசமாக எடுத்துக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் உரிய விண்ணப்பதாரர்களிடமிருந்து online முறையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விண்ணப்பதாரர்கள் tne- sevai.tn.gov.in  இணைய முகவரியில் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்படுள்ளது .


#kanniyakumari #collector #colacheltoday #kulam #tamilnadu 

சனி, 6 ஜூலை, 2024

மயிலாடியில் தற்கொலைக்கு மனைவியை தூண்டியவருக்கு ஏழு ஆண்டுகள் ஜெயில்

குமரி மாவட்டம் மயிலாடியை சேர்ந்தவர்  ரவி, புத்தளம் பகுதியை  சேர்ந்தவர் விஜி  , இருவரும் 2011 ஆம் ஆண்டு  திருமணம் செய்து கொண்டனர்
இந்நிலையில் மனைவி விஜியிடம் கூடுதல் வரதட்சனை கேட்டு ரவி அடிக்கடி தகராறு செய்து வந்த நிலையில் 2012 ஆம் ஆண்டு வரதட்சணை கொடுமையால் விஜி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்,இந்த வழக்கில் நாகர்கோவில் மகிளா நீதிமன்றம் மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவர் ரவிக்கு ஏழுஆண்டுகள்  சிறை தண்டனையும் , ரூபாய் ஆயிரம் அபாராதமும்  விதித்து தீர்ப்பு அளித்தது.

#kanniyakumari #colachel #myladi #nagercoil 

வெள்ளி, 5 ஜூலை, 2024

குமரியில் தேசியகொடியை உயர்த்தி பிடித்த கம்பீர கம்பம் ,களை இழந்த சோகம் ஆட்சியர் பதிலளிக்க உத்தரவு.

கன்னியாகுமரி அருகே உள்ள மகாதானபுரம் ரவுண்டானாவில் 148 அடி உயரமுள்ள தேசிய கொடி கம்பம் நிறுவப்பட்டு, தேசியக்கொடி பறக்க விடப்பட்டது பின்னர் அதிக காற்றால் தேசிய கொடி சேதம் அடைந்தது,


அதனை தொடர்ந்து கொடி அகற்றப்பட்ட நிலையில் தற்போது வரை தேசிய கொடி பறக்க விடவில்லை,இதனால் வெறுமனே கொடி கம்பம் உள்ளது,எனவே நினைவு சின்னமான தேசிய கொடியை மீண்டும் 148 உயரமுள்ள கம்பத்தில் பறக்க விடவேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது, இந்நிலையில் இந்த வழக்கின் மனு இன்று விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில்,ஏன் தேசியக் கொடியை அங்கு பறக்க விடவில்லை என நீதிபதி கேள்வி எழுப்பினார், இதற்கு மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.


#kanniyakumari #Colacheltoday #nagercoil

தக்கலை: பெண்ணை காப்பாற்ற தன்னை பலி கொடுத்த இளைஞர்

திக்கணங்கோடு அருகே உள்ள மேக்கோடு பகுதியை சேர்ந்தவர் சுனில் ராஜ் (36). பெயின்டர். இவர் நேற்று முன்தினம் திக்கணங்கோட்டில் இருந்து திங்கள்சந...