வெள்ளி, 5 ஜூலை, 2024

குமரியில் தேசியகொடியை உயர்த்தி பிடித்த கம்பீர கம்பம் ,களை இழந்த சோகம் ஆட்சியர் பதிலளிக்க உத்தரவு.

கன்னியாகுமரி அருகே உள்ள மகாதானபுரம் ரவுண்டானாவில் 148 அடி உயரமுள்ள தேசிய கொடி கம்பம் நிறுவப்பட்டு, தேசியக்கொடி பறக்க விடப்பட்டது பின்னர் அதிக காற்றால் தேசிய கொடி சேதம் அடைந்தது,


அதனை தொடர்ந்து கொடி அகற்றப்பட்ட நிலையில் தற்போது வரை தேசிய கொடி பறக்க விடவில்லை,இதனால் வெறுமனே கொடி கம்பம் உள்ளது,எனவே நினைவு சின்னமான தேசிய கொடியை மீண்டும் 148 உயரமுள்ள கம்பத்தில் பறக்க விடவேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது, இந்நிலையில் இந்த வழக்கின் மனு இன்று விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில்,ஏன் தேசியக் கொடியை அங்கு பறக்க விடவில்லை என நீதிபதி கேள்வி எழுப்பினார், இதற்கு மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.


#kanniyakumari #Colacheltoday #nagercoil

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தக்கலை: பெண்ணை காப்பாற்ற தன்னை பலி கொடுத்த இளைஞர்

திக்கணங்கோடு அருகே உள்ள மேக்கோடு பகுதியை சேர்ந்தவர் சுனில் ராஜ் (36). பெயின்டர். இவர் நேற்று முன்தினம் திக்கணங்கோட்டில் இருந்து திங்கள்சந...