திங்கள், 8 ஜூலை, 2024

கன்னியாகுமரியில் பேரிடர் காலத்தில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை கொடுக்கும் வசதியுடன் கூடிய புறக்காவல் நிலையம் திறப்பு



கன்னியாகுமரி திரிவேணி சங்கமம் கடற்கரைப்பகுதியில் புதிதாக மாவட்டக் காவல்துறையால் அமைக்கப்பட்ட புறக்காவல் நிலையத்தை இன்று (08.07.2024) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் *திரு.E. சுந்தரவதனம் IPS* அவர்கள் திறந்து வைத்தார்.

 புதிதாக அமைக்கப்பட்ட புறக்காவல் நிலையத்தில் கடற்கரைக்கு வரும் பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் விதத்தில், 24 மணி நேரமும் கண்காணிக்கும் வகையில் 34 CCTV கேமராக்கள் பொருத்தப்பட்டு அதனை புறக்காவல் நிலையத்தில் கண்காணிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
பேரிடர் காலங்கள் மற்றும் கடல் சீற்ற காலங்களில் கடற்கரையில் இருக்கும் பொதுமக்களை எச்சரிக்கை செய்து, பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தும் வண்ணம் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில் கன்னியாகுமரி உட்கோட்ட காவல்துணை கண்காணிப்பாளர் திரு. மகேஷ் குமார், கன்னியாகுமரி காவல் நிலைய ஆய்வாளர் திரு. நெப்போலியன், கன்னியாகுமரி போக்குவரத்து ஒழுங்கு பிரிவு ஆய்வாளர் திரு. பிரபு மற்றும் காவலர்கள் கலந்து கொண்டனர்.

#KanniyakumariDistrictPolice 
#szsocialmedia1 
#tamilnadupolice 
#TruthAloneTriumphs #kanniyakumari
#Colacheltoday 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தக்கலை: பெண்ணை காப்பாற்ற தன்னை பலி கொடுத்த இளைஞர்

திக்கணங்கோடு அருகே உள்ள மேக்கோடு பகுதியை சேர்ந்தவர் சுனில் ராஜ் (36). பெயின்டர். இவர் நேற்று முன்தினம் திக்கணங்கோட்டில் இருந்து திங்கள்சந...