வியாழன், 30 ஏப்ரல், 2020

மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது கலெக்டர் தகவல்

மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது

கலெக்டர் தகவல்


குமரியில் 5 ஆயிரத்து 962 மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர பராமரிப்பு உதவி தொகையாக மாதம் ரூ.1,500 வீதம் ஏப்ரல், மே ஆகிய 2 மாதங்களுக்கு மொத்தம் ரூ.1 கோடியே 78 லட்சத்து 86 ஆயிரம் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு உள்ளது. கொரோனா கட்டுப்பாட்டு அறையில் செயல்படும் இலவச தொலைபேசி அழைப்பு மூலம் உதவி கோரி 476 மாற்றுத்திறனாளிகளுக்கு அந்தந்த பகுதி தாசில்தார் மூலம் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது. மேலும் 178 தவழும் மாற்றுத் திறனாளிகளுக்கு காலுறை, கையுறை, கிருமி நாசினிகள் மற்றும் டிஷ்யூ பேப்பர் ஆகியவையும் வழங்கப்பட்டுள்ளது. இந்த தகவலை கலெக்டர் பிரசாந்த் வடநேரே தெரிவித்துள்ளார்.

புதன், 29 ஏப்ரல், 2020

மண்டைக்காடு மக்களுக்கு குளச்சல் ஏ . எஸ் . பி அலுவலக ஊழியர்கள் நிவாரண உதவி

கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப் பிக்கப்பட்டுள்ளது . இதனால் ஏழைகள் , ஆதரவற்றவர்கள் , குடிசை வாசிகள் உணவு பொருள் கிடைக்காமல் தவித்து வருகின்றனர் . தன்னார்வலர்கள் ஆதரவற்றவர்களுக்கு உதவி செய்து வந்தாலும் சில இடங்களில் குடிசை வாசிகளுக்கு | நிவாரண உதவிகள் கிடைக்காமல் உள்ளது . இதனையறிந்த குளச்சல் ஏ . எஸ் . பி . விஸ்வேஸ் பி . சாஸ் திரி , அவரது அலுவலக ஊழியர்கள் , அவரது துப்பாக்கி ஏந்திய பாதுகாவலர் , ஓட்டுனர் மற்றும் அதிரடிப்படை வீரர்கள் ஆகி யோர் தங்கள் சொந்த செலவில் கொரோனா நிவாரணம் அளிக்க முன்வந்தனர் . இதையடுத்து மண்டைக்காடு அருகே பரவன் காலனி பொதுமக்களுக்கு அரிசி , காய்கறிகள் உள்பட சமையல் பொருட்கள் வழங்கப்பட்டது . ஏ . எஸ் . பி . விஸ்வேஸ் பி . சாஸ்திரி நேரில் சென்று மக்களுக்கு வழங்கினார் . அப் போது சிறுவர் , சிறுமிகளுக்கு இனிப்பும் வழங்கப்பட்டது . இதில் குளச்சல் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் ராதா கிருஷ்ணன் , சப் - இன்ஸ்பெக்டர்கள் இளங்கோ , சுரேஷ் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர் .

மீன்பிடி தடை காலத்தை ரத்து செய்ய வேண்டும்மீனவர் வளர்ச்சி அறக்கட்டளை கோரிக்கை





மத்திய- மாநில அரசுகளுக்கு சர்வதேச மீனவர் வளர்ச்சி அறக்கட்டளை தலைவர் ஜஸ்டின் ஆன்டணி அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

கொரோனா தொற்று பரவாமல் தடுக்க மத்திய அரசு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்து உள்ளது. இதனால் ஆழ்கடல் மீனவர்களும் வீட்டில் முடங்கி உள்ளனர். ஜூன் 1-ந் தேதி முதல் 60 நாட்கள் இந்தியாவின் மேற்கு கடற்கரை பகுதியில் மீன்பிடி தடை காலம் அமலுக்கு வருவதால் மீனவர்கள் மிகவும் சோர்ந்து போய் உள்ளனர். ஏனெனில் அவர்கள் மார்ச், ஏப்ரல் மாதங்களில் ஆழ்கடலுக்கு செல்ல முடியாததால் ஏற்பட்டுள்ள வாழ்வாதார இழப்பை ஈடுசெய்ய, இந்த வருடத்தின் மீன்பிடி தடை காலத்தை ரத்து செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


செவ்வாய், 28 ஏப்ரல், 2020

குழித்துறை அரசு ஆஸ்பத்திரிசிறப்பு பிரசவ வார்டுக்கு விஜயதரணி எம்.எல்.ஏ. நிதி உதவி





விஜயதரணி எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் கொரோனா சிறப்பு சிகிச்சை வார்டு செயல்படுகிறது. குமரி மேற்கு மாவட்ட கடலோரம் மற்றும் மலையோர பகுதிகளில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லை. எனவே மார்த்தாண்டம், விளவங்கோடு, கிள்ளியூர் பகுதி மக்கள் பயன்பெறும் வகையில் குழித்துறை அரசு ஆஸ்பத்திரியில் 65 படுக்கைகளுடன் சிறப்பு பிரசவ வார்டு அமைக்கப்படுகிறது. இதற்கு உள்கட்டமைப்பு வசதி மற்றும் மருத்துவ உபகரணங்கள் வாங்க தேவையான அனைத்து நிதியையும் எனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து வழங்கி உள்ளேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

வெளிநாட்டில் இறந்தகுமரி கொத்தனாரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க குடும்பத்தினர் வலியுறுத்தல்





குமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே பாத்திமா நகர் பகுதியை சேர்ந்தவர் அஜில்குமார் (வயது 47). இவருடைய மனைவி விஜயா (45). இவர்களுக்கு அஜீஷா (21) என்ற மகளும், அருண் (20) என்ற மகனும் உள்ளனர். அஜில்குமார் கடந்த 20 வருடங்களாக வெளிநாட்டில் கொத்தனாராக பணிபுரிந்து வந்தார். தற்போது அவர் சவுதி அரேபியாவில் இருந்தார். இந்த நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால், அங்கு தங்கியிருந்த அறையில் முடங்கினார். அப்போது, திடீரென அவர் மாரடைப்பால் இறந்து விட்டார்.

பின்னர் பிரேத பரிசோதனை முடிந்து ஆஸ்பத்திரியிலேயே அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது. இதனை அறிந்த அவருடைய குடும்பத்தினர் சோகத்தில் உள்ளனர். அதே சமயத்தில், அவருடைய உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர முடியாத நிலை உள்ளதால், 13 நாட்களாக கொத்தனார் உடல் அங்கேயே உள்ளது. இது சம்பந்தமாக மத்திய, மாநில அரசுகள் உதவி செய்து அஜில்குமார் உடலை மீட்டு சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என குடும்பத்தினர் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

திங்கள், 27 ஏப்ரல், 2020

மோட்டார் சைக்கிளில் மது கடத்திய 2 பேர் கைது



பூதப்பாண்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாரிச்செல்வன் மற்றும் போலீசார் நேற்று இறச்சகுளம் சந்திப்பில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் வந்தனர். அவர்களை தடுத்து சோதனை செய்த போது, பாட்டிலில் மதுபானம் கடத்தியது கண்டு பிடிக்கப்பட்டது. அவர்களிடம் விசாரணை நடத்திய போது, நாகர்கோவில் சிதம்பரநகர் புதுத்தெருவை சேர்ந்த சிவதாஸ் (வயது 21), கணேசபுரம் பகுதியை சேர்ந்த விஷ்ணுபிரசாத் (24) என்பது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து மது பாட்டிலை பறிமுதல் செய்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.


வெள்ளி, 24 ஏப்ரல், 2020

குளச்சல் போலீசாருக்கு தெர்மல் ஸ்கேனர் பரிசோதனை

குளச்சல்

போலீசாருக்கு தெர்மல் ஸ்கேனர் பரிசோதனை



கொரோனா வைரஸ் தடுப்பு பணியில் சுகாதாரத்துறை, உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றும் தூய்மை பணியாளர்கள் மற்றும் போலீசார் முழுழூச்சுடன் பணியாற்றி வருகின்றனர். இந்தநிலையில் போலீசாருக்கு தெர்மல் ஸ்கேனர் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் உத்தரவிட்டுள்ளார்.

இதையடுத்து குளச்சலில் இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி மேற்பார்வையில் டாக்டர் பெமிலா, செவிலியர் வசந்தா ஆகியோர் போலீசாருக்கு தெர்மல் ஸ்கேனர் கருவி மூலம் பரிசோதனை செய்தனர். இதில் அவர்களுக்கு இயல்பான உடல் வெப்ப நிலை இருந்தது. மேலும் சளி, இருமல் எதுவும் இல்லை. இதையடுத்து போலீசார் தங்கள் அன்றாட பணிகளை தொடர்ந்தனர்.

தக்கலை: பெண்ணை காப்பாற்ற தன்னை பலி கொடுத்த இளைஞர்

திக்கணங்கோடு அருகே உள்ள மேக்கோடு பகுதியை சேர்ந்தவர் சுனில் ராஜ் (36). பெயின்டர். இவர் நேற்று முன்தினம் திக்கணங்கோட்டில் இருந்து திங்கள்சந...