குளச்சல்
போலீசாருக்கு தெர்மல் ஸ்கேனர் பரிசோதனை
கொரோனா வைரஸ் தடுப்பு பணியில் சுகாதாரத்துறை, உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றும் தூய்மை பணியாளர்கள் மற்றும் போலீசார் முழுழூச்சுடன் பணியாற்றி வருகின்றனர். இந்தநிலையில் போலீசாருக்கு தெர்மல் ஸ்கேனர் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் உத்தரவிட்டுள்ளார்.
இதையடுத்து குளச்சலில் இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி மேற்பார்வையில் டாக்டர் பெமிலா, செவிலியர் வசந்தா ஆகியோர் போலீசாருக்கு தெர்மல் ஸ்கேனர் கருவி மூலம் பரிசோதனை செய்தனர். இதில் அவர்களுக்கு இயல்பான உடல் வெப்ப நிலை இருந்தது. மேலும் சளி, இருமல் எதுவும் இல்லை. இதையடுத்து போலீசார் தங்கள் அன்றாட பணிகளை தொடர்ந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக