விஜயதரணி எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் கொரோனா சிறப்பு சிகிச்சை வார்டு செயல்படுகிறது. குமரி மேற்கு மாவட்ட கடலோரம் மற்றும் மலையோர பகுதிகளில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லை. எனவே மார்த்தாண்டம், விளவங்கோடு, கிள்ளியூர் பகுதி மக்கள் பயன்பெறும் வகையில் குழித்துறை அரசு ஆஸ்பத்திரியில் 65 படுக்கைகளுடன் சிறப்பு பிரசவ வார்டு அமைக்கப்படுகிறது. இதற்கு உள்கட்டமைப்பு வசதி மற்றும் மருத்துவ உபகரணங்கள் வாங்க தேவையான அனைத்து நிதியையும் எனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து வழங்கி உள்ளேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக