புதன், 29 ஏப்ரல், 2020

மீன்பிடி தடை காலத்தை ரத்து செய்ய வேண்டும்மீனவர் வளர்ச்சி அறக்கட்டளை கோரிக்கை





மத்திய- மாநில அரசுகளுக்கு சர்வதேச மீனவர் வளர்ச்சி அறக்கட்டளை தலைவர் ஜஸ்டின் ஆன்டணி அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

கொரோனா தொற்று பரவாமல் தடுக்க மத்திய அரசு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்து உள்ளது. இதனால் ஆழ்கடல் மீனவர்களும் வீட்டில் முடங்கி உள்ளனர். ஜூன் 1-ந் தேதி முதல் 60 நாட்கள் இந்தியாவின் மேற்கு கடற்கரை பகுதியில் மீன்பிடி தடை காலம் அமலுக்கு வருவதால் மீனவர்கள் மிகவும் சோர்ந்து போய் உள்ளனர். ஏனெனில் அவர்கள் மார்ச், ஏப்ரல் மாதங்களில் ஆழ்கடலுக்கு செல்ல முடியாததால் ஏற்பட்டுள்ள வாழ்வாதார இழப்பை ஈடுசெய்ய, இந்த வருடத்தின் மீன்பிடி தடை காலத்தை ரத்து செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தக்கலை: பெண்ணை காப்பாற்ற தன்னை பலி கொடுத்த இளைஞர்

திக்கணங்கோடு அருகே உள்ள மேக்கோடு பகுதியை சேர்ந்தவர் சுனில் ராஜ் (36). பெயின்டர். இவர் நேற்று முன்தினம் திக்கணங்கோட்டில் இருந்து திங்கள்சந...