திங்கள், 27 ஏப்ரல், 2020

மோட்டார் சைக்கிளில் மது கடத்திய 2 பேர் கைது



பூதப்பாண்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாரிச்செல்வன் மற்றும் போலீசார் நேற்று இறச்சகுளம் சந்திப்பில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் வந்தனர். அவர்களை தடுத்து சோதனை செய்த போது, பாட்டிலில் மதுபானம் கடத்தியது கண்டு பிடிக்கப்பட்டது. அவர்களிடம் விசாரணை நடத்திய போது, நாகர்கோவில் சிதம்பரநகர் புதுத்தெருவை சேர்ந்த சிவதாஸ் (வயது 21), கணேசபுரம் பகுதியை சேர்ந்த விஷ்ணுபிரசாத் (24) என்பது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து மது பாட்டிலை பறிமுதல் செய்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தக்கலை: பெண்ணை காப்பாற்ற தன்னை பலி கொடுத்த இளைஞர்

திக்கணங்கோடு அருகே உள்ள மேக்கோடு பகுதியை சேர்ந்தவர் சுனில் ராஜ் (36). பெயின்டர். இவர் நேற்று முன்தினம் திக்கணங்கோட்டில் இருந்து திங்கள்சந...