புதன், 29 ஏப்ரல், 2020
மண்டைக்காடு மக்களுக்கு குளச்சல் ஏ . எஸ் . பி அலுவலக ஊழியர்கள் நிவாரண உதவி
கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப் பிக்கப்பட்டுள்ளது . இதனால் ஏழைகள் , ஆதரவற்றவர்கள் , குடிசை வாசிகள் உணவு பொருள் கிடைக்காமல் தவித்து வருகின்றனர் . தன்னார்வலர்கள் ஆதரவற்றவர்களுக்கு உதவி செய்து வந்தாலும் சில இடங்களில் குடிசை வாசிகளுக்கு | நிவாரண உதவிகள் கிடைக்காமல் உள்ளது . இதனையறிந்த குளச்சல் ஏ . எஸ் . பி . விஸ்வேஸ் பி . சாஸ் திரி , அவரது அலுவலக ஊழியர்கள் , அவரது துப்பாக்கி ஏந்திய பாதுகாவலர் , ஓட்டுனர் மற்றும் அதிரடிப்படை வீரர்கள் ஆகி யோர் தங்கள் சொந்த செலவில் கொரோனா நிவாரணம் அளிக்க முன்வந்தனர் . இதையடுத்து மண்டைக்காடு அருகே பரவன் காலனி பொதுமக்களுக்கு அரிசி , காய்கறிகள் உள்பட சமையல் பொருட்கள் வழங்கப்பட்டது . ஏ . எஸ் . பி . விஸ்வேஸ் பி . சாஸ்திரி நேரில் சென்று மக்களுக்கு வழங்கினார் . அப் போது சிறுவர் , சிறுமிகளுக்கு இனிப்பும் வழங்கப்பட்டது . இதில் குளச்சல் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் ராதா கிருஷ்ணன் , சப் - இன்ஸ்பெக்டர்கள் இளங்கோ , சுரேஷ் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர் .
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
தக்கலை: பெண்ணை காப்பாற்ற தன்னை பலி கொடுத்த இளைஞர்
திக்கணங்கோடு அருகே உள்ள மேக்கோடு பகுதியை சேர்ந்தவர் சுனில் ராஜ் (36). பெயின்டர். இவர் நேற்று முன்தினம் திக்கணங்கோட்டில் இருந்து திங்கள்சந...
-
திக்கணங்கோடு அருகே உள்ள மேக்கோடு பகுதியை சேர்ந்தவர் சுனில் ராஜ் (36). பெயின்டர். இவர் நேற்று முன்தினம் திக்கணங்கோட்டில் இருந்து திங்கள்சந...
-
குமரி மாவட்டம், குளச்சல் மீன்பிடி துறைமுக விரிவாக்கத்திற்கான இடத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர். அழகுமீனா, நேரில் ஆய்வு மேற்கொண்டு தெரிவ...
-
தக்கலையில் கணவனை உதறிவிட்டு கள்ள காதலனுடன் சென்ற இளம்பெண்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக