ஞாயிறு, 8 செப்டம்பர், 2024

ஓட்டுநர் உரிமம் இன்றி ஓட்டி வரப்பட்ட கனிம வள லாரி ரூ.15000 அபராதம் விதித்து பறிமுதல்

கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சுந்தரவதனம் I.P.S., அவர்களின் உத்தரவின் பேரில் நாகர்கோவில் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் செல்வி.யாங்சென் டோமா பூட்டியா I.P.S., அவர்களின் மேற்பார்வையில், இன்று 07.09.2024 ம் தேதி, நாகர்கோவில் போக்குவரத்து காவல்துறையினர் வடசேரியில் வாகன சோதனை நடத்தினர். அப்போது, இரவு 10 மணிக்கு முன்பே நகர்ப்பகுதிக்குள் இயக்கப்பட்ட கனரக லாரிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் ஓட்டுநர் உரிமம் இன்றி கனிமவள லாரியை
இயக்கிய மார்த்தாண்டத்தைச் சேர்ந்த ஜஸ்டின் என்பவருக்கு ரூ.10000 அபராதமும், ஓட்டுநர் உரிமம் இல்லாத நபருக்கு லாரியை ஓட்ட அனுமதி அளித்த லாரி உரிமையாளருக்கு ரூ.5000 அபராதமும் ஆக மொத்தம் ரூ.15000 அபராதம் விதித்து லாரி பறிமுதல் செய்யப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தக்கலை: பெண்ணை காப்பாற்ற தன்னை பலி கொடுத்த இளைஞர்

திக்கணங்கோடு அருகே உள்ள மேக்கோடு பகுதியை சேர்ந்தவர் சுனில் ராஜ் (36). பெயின்டர். இவர் நேற்று முன்தினம் திக்கணங்கோட்டில் இருந்து திங்கள்சந...