வியாழன், 12 செப்டம்பர், 2024

குமரி : கள்ளக்காதலுடன் ஓட முயன்ற 42 வயது பள்ளி ஆசிரியை

கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் பகுதியை சேர்ந்த 42 வயது பெண் ஒருவர் அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். அவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். அவரது வீட்டிற்கு உறவுக்கார வாலிபர் ஒருவார் வந்து செல்வது வழக்கம். பின்னர் கள்ளக்காதலாக மாறி உள்ளது. இந்த விவகாரம் ஆசிரியையின் கணவருக்கு தெரிய வந்தது. இதையடுத்து அவர் மனைவியை கண்டித்தார். ஒருநாள் வாலிபரும் ஆசிரியையும்
உல்லாசமாக இருப்பதை கண்டு பிரச்சனை ஏற்பட்டு, மனைவியை கணவர் சரமாரியாக தாக்கியதாக தெரிகிறது. இதில் வாலிபர் தப்பி ஓடி விட்டார். இதில் ஆசிரியை காது கிழிந்து தொங்கி உள்ளது. இதற்கிடையில் மீண்டும் கள்ளக்காதலன் காதலியை பார்ப்பதற்காக அவரது வீட்டுக்கு வந்த நேரம், ஆசிரியை கணவர் திடீரென வந்ததால் மீண்டும் வாலிபரை அவர் சரமாரியாக தாக்கியுள்ளார். பின்னர் இந்த விவகாரம் கன்னியாகுமரி மகளிர் போலீஸ் நிலையத்தில் சென்றது. போலீசார் ஆசிரியை மற்றும் அவரது கணவர், கள்ளக்காதலன் ஆகியோரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஆசிரியை கள்ளக்காதலுடன் தான் செல்வேன் என்பதில் பிடிவாதமாய் இருந்தார். போலீசார் பலமுறை சமாதானம் செய்தும் ஆசிரியை ஏற்றுக்கொள்ளவில்லை. பின்னர் போலீசார் ஒரு வழியாக அந்த ஆசிரியை சமாதானம் செய்து கணவர் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தக்கலை: பெண்ணை காப்பாற்ற தன்னை பலி கொடுத்த இளைஞர்

திக்கணங்கோடு அருகே உள்ள மேக்கோடு பகுதியை சேர்ந்தவர் சுனில் ராஜ் (36). பெயின்டர். இவர் நேற்று முன்தினம் திக்கணங்கோட்டில் இருந்து திங்கள்சந...