சனி, 7 செப்டம்பர், 2024

மகனுடன் குளிக்க சென்ற தொழிலாளி குளத்தில் மூழ்கி பலி

மகனுடன் குளிக்க சென்ற தொழிலாளி குளத்தில் மூழ்கி உயிரிழப்பு குலசேகரம் அடுத்த பொன்மனை பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ் இவருக்கு சரிகா என்ற மனைவி, தியா , தீரஜ் என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர். ராஜேஷ் திருவனந்தபுரத்தில் வெல்டிங் தொழில் செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று இரவு
ராஜேஷ் தனது மகன் தீரஜ் - டன் அந்தப் பகுதியில் உள்ள புத்தன்குளம் என்ற குளத்துக்கு குளிக்க சென்றுள்ளார். பின்னர் சிறிது நேரத்திற்கு பின்னர் தீரஜ் மட்டும் தனியாக வீட்டிற்கு வந்து அப்பாவை காணவில்லை என தாயிடம் கூறியுள்ளார். இதை கேட்ட சரிகா அக்கம்பக்கத்தினரை அழைத்துக் கொண்டு குளத்திற்கு சென்றார். பின்னர் தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு படை வீரர்கள் தண்ணீரில் மூழ்கி தேடிய போது, இறந்த நிலையில் ராஜேஷின் உடலை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். இது தொடர்பான புகாரின் பேரில் குலசேகரம் போலீசார் ராஜேஷ் உடலை கைப்பற்றி குலசேகரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தக்கலை: பெண்ணை காப்பாற்ற தன்னை பலி கொடுத்த இளைஞர்

திக்கணங்கோடு அருகே உள்ள மேக்கோடு பகுதியை சேர்ந்தவர் சுனில் ராஜ் (36). பெயின்டர். இவர் நேற்று முன்தினம் திக்கணங்கோட்டில் இருந்து திங்கள்சந...