ஞாயிறு, 8 செப்டம்பர், 2024
குமரி மாவட்டம் குமாரபுரம் அருகில் பைக் மோதி மாற்றுத்திறனாளி உயிரிழப்பு
கன்னியாகுமரி மாவட்டம் குமாரபுரம் அடுத்த கண்ணனூர் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் மாற்றுத்திறனாளி ஆவார். இவருக்கு மனைவியும், இரண்டு மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். பிள்ளைகள் மூன்று பேருக்கும் திருமணமாகி விட்டது.
இந்த நிலையில் கடந்த 4 ஆம் தேதி கடைக்கு செல்வதாக கூறி விட்டு சென்ற செல்வராஜ், சாலையை கடக்க முயலும் போது எதிர்பாராத விதமாக அவ்வழி வந்த இருசக்கர வாகனம் அவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு, தலையில் பலத்த காயமடைந்த வரை அக்கம் பக்கத்தில் மீட்டு தக்கலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.அங்கிருந்து குமரி அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் மேல் சிகிச்சை பெற்று வந்தார்.
அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று செல்வராஜ் உயிரிழந்தார். கொற்றிக்கோடு போலீசார் விபத்து நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்து, விபத்தை ஏற்படுத்திய ராஜா என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
தக்கலை: பெண்ணை காப்பாற்ற தன்னை பலி கொடுத்த இளைஞர்
திக்கணங்கோடு அருகே உள்ள மேக்கோடு பகுதியை சேர்ந்தவர் சுனில் ராஜ் (36). பெயின்டர். இவர் நேற்று முன்தினம் திக்கணங்கோட்டில் இருந்து திங்கள்சந...

-
03.09.2024 (செவ்வாய்க்கிழமை) அன்று காலை 08:00 மணி முதல் மாலை 2:00 மணி வரை நாகர்கோவில், வடசேரி, ஆசாரிபள்ளம் மற்றும் தடிகாரண்கோணம் துணை ம...
-
தக்கலையில் கணவனை உதறிவிட்டு கள்ள காதலனுடன் சென்ற இளம்பெண்
-
கருங்கல் உலகன்விளை பகுதியை சேர்ந்தவர் ராஜன் மகன் அஜித் (18). இவர் நாகர்கோவில் கோணம் அரசு ஐடிஐ -ல் படித்து வந்தார். சம்பவ தினம் அதிகாலைய...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக