சனி, 14 செப்டம்பர், 2024
குமரி: மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் கைது.
குமரி: மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் கைது
கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் அருகே வில்லிவிளையைச் சேர்ந்தவர் டெம்போ டிரைவர் முருகேசன் (52). இவர் சில நாட்களுக்கு முன்பு அப்பகுதியில் உள்ள வீட்டில் தனியாக இருந்த மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.இதுதொடர்பாக ராஜாக்கமங்கலம் போலீசார் முருகேசனை தேடி வந்த நிலையில், நேற்று (செப்.,13) ஈத்தாமொழியில் வைத்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
_____________________________________________________________________________________________
செய்தி துளிகள்: குமரி மாவட்டம்
திங்கள் நகர்: மினிபேருந்து ஓட்டுநர்-பேரூராட்சி ஊழியர் மோதல்
திங்கள்சந்தை பேருந்து நிலையத்தில் நேற்று மாலை மினி பேருந்து ஒன்று உள்ளே நுழைந்தது. இதற்கு பேரூராட்சி ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் பேரூராட்சி ஊழியர்களுக்கும் மினி பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறியது. இதில் மாற்றுத்திறனாளி ஊழியர் ஒருவர் காயம் அடைந்தார். பேரூராட்சி நிர்வாகம் கொடுத்த புகாரில் இரணியல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
_____________________________________________________________________
_________________________
கைது செய்யப்பட்ட துணை சர்வேயருக்கு நீதிமன்ற காவல்
நாகர்கோவில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசாரால் 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியபோது கைது செய்யப்பட்ட கிள்ளியூர் தாலுகா துணை சர்வேயர் சிறையில் நேற்று(செப்.13) அடைக்கப்பட்டார். அவரை வரும் 27ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க தலைமை குற்றவியல் (பொறுப்பு) நீதிபதி உத்தரவிட்டார். நில அளவை செய்வதற்காக லஞ்சம் வாங்கியபோது அவர் கைது செய்யப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தெரிவித்தனர்.
_______________________________________________________________________________________________
குமரி அருகே கார் மோதி முதியவர் உயிரிழப்பு
குமாரபுரத்தைச் சேர்ந்தவர் முத்தையன் இவர் சித்திரங்கோட்டில் மகள் வீட்டில் இருந்தார். மகளின் மகன் ராஜசேகருக்கு சொந்தமான காரை 10 நாட்களுக்கு முன்பு வீட்டில் போர்டிகோவில் ஹேண்ட் பிரேக் போடாமல் நிறுத்தி வைத்திருந்தார். 12ம் தேதி கார் உருண்டு முத்தையன் மீது மோதியது. உடனடியாக அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் இறந்து போனார். கொற்றிக்கோடு போலீசார் நேற்று வழக்கு பதிவு செய்தனர்
this
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
தக்கலை: பெண்ணை காப்பாற்ற தன்னை பலி கொடுத்த இளைஞர்
திக்கணங்கோடு அருகே உள்ள மேக்கோடு பகுதியை சேர்ந்தவர் சுனில் ராஜ் (36). பெயின்டர். இவர் நேற்று முன்தினம் திக்கணங்கோட்டில் இருந்து திங்கள்சந...

-
03.09.2024 (செவ்வாய்க்கிழமை) அன்று காலை 08:00 மணி முதல் மாலை 2:00 மணி வரை நாகர்கோவில், வடசேரி, ஆசாரிபள்ளம் மற்றும் தடிகாரண்கோணம் துணை ம...
-
தக்கலையில் கணவனை உதறிவிட்டு கள்ள காதலனுடன் சென்ற இளம்பெண்
-
கருங்கல் உலகன்விளை பகுதியை சேர்ந்தவர் ராஜன் மகன் அஜித் (18). இவர் நாகர்கோவில் கோணம் அரசு ஐடிஐ -ல் படித்து வந்தார். சம்பவ தினம் அதிகாலைய...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக