செவ்வாய், 10 செப்டம்பர், 2024

சர்வதேச மகளிர் வாள்போட்டி கன்னியாகுமரி மாவட்ட மாணவி பங்கேற்பு

சர்வதேச மகளிர் வாள் விளையாட்டுப் போட்டிகள் வரும் 14, 15 ஆகிய நாட்களில் டெல்லியில் நடைபெற உள்ளது. இதில் விளையாடும் இந்திய அணியில் குமரி மாவட்டத்தை சேர்ந்த என். வி ஜெனிஷா என்பவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த போட்டியில் அவருடன் மேலும் ஆறு பேர் தமிழ்நாட்டிலிருந்து தேர்வாகியுள்ளனர். ஜெனிஷா 12-ம் வகுப்பு மாணவியாவார். மேலும் கன்னியாகுமரி மாவட்ட வாள் விளையாட்டு கழகம் சார்பில் ஆற்றூர் அடுத்த கல்லுப்பாலம் பகுதியில் உள்ள பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
சர்வதேச போட்டியில் பங்கேற்கும் மாணவியை கன்னியாகுமரி மாவட்ட வாள் விளையாட்டுக் கழக தலைவர் சிந்துகுமார், செயலாளர் அமிர்தராஜ், பயிற்சியாளர் செல்வகுமார் உட்பட பலர் பாராட்டி உள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தக்கலை: பெண்ணை காப்பாற்ற தன்னை பலி கொடுத்த இளைஞர்

திக்கணங்கோடு அருகே உள்ள மேக்கோடு பகுதியை சேர்ந்தவர் சுனில் ராஜ் (36). பெயின்டர். இவர் நேற்று முன்தினம் திக்கணங்கோட்டில் இருந்து திங்கள்சந...