வியாழன், 5 செப்டம்பர், 2024
போக்குவரத்து விதிமீறல்: 17 பைக்குகள் பறிமுதல்; ரூ. 75 ஆயிரம் அபராதம்
*கன்னியாகுமரி மாவட்டம்- நாகர்கோவில் போக்குவரத்து காவல் துறை - 17 அதிவேக வாகனங்கள் அபராதம் விதித்து பறிமுதல்*
கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சுந்தரவதனம் I.P.S., அவர்களின் உத்தரவின் பேரில் பதிவெண் இல்லாத அதிவேக இருசக்கர வாகனங்கள், மூன்று நபர்களை ஏற்றிக்கொண்டு அபாயகரமாக ஓட்டுதல், ஸ்டண்ட் செய்தல் போன்ற விதிமீறல்களில் ஈடுபடும் இளைஞர்கள், மாணவர்கள் மீது தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அதன் தொடர்ச்சியாக, நாகர்கோவில் உதவி காவல் கண்காணிப்பாளர் செல்வி.யாங்சென் டோமா பூட்டியா I.P.S., அவர்களின் மேற்பார்வையில், நாகர்கோவில் போக்குவரத்து காவல்துறையினர் சாதாரண உடையில் ஸ்காட் கல்லூரி சாலையில் வாகன சோதனை நடத்தினர்.
அப்போது, சாலை விதிகளை மீறியும் குடிபோதையிலும் ஓட்டி வரப்பட்ட 17 வாகனங்களை சுமார் 75000 ரூபாய் அபராதம் விதித்து பறிமுதல் செய்தனர்.
பின்னர் இளைஞர்களின் பெற்றோர், உறவினர் வரவழைக்கப்பட்டு
அறிவுரைகள் வழங்கியும், அபராதங்கள் செலுத்த வைக்கப்பட்டும், பதிவெண் தகடுகள் சரி செய்யப்பட்டும், வாகனங்கள் விடுவிக்கப்பட்டன.
பள்ளி, கல்லூரி பகுதிகளில், அதிவேக வாகனங்களில் ஸ்டண்ட் செய்வது போன்ற விதிமீறல்களில் ஈடுபட்டு வரும் இளைஞர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
தக்கலை: பெண்ணை காப்பாற்ற தன்னை பலி கொடுத்த இளைஞர்
திக்கணங்கோடு அருகே உள்ள மேக்கோடு பகுதியை சேர்ந்தவர் சுனில் ராஜ் (36). பெயின்டர். இவர் நேற்று முன்தினம் திக்கணங்கோட்டில் இருந்து திங்கள்சந...

-
03.09.2024 (செவ்வாய்க்கிழமை) அன்று காலை 08:00 மணி முதல் மாலை 2:00 மணி வரை நாகர்கோவில், வடசேரி, ஆசாரிபள்ளம் மற்றும் தடிகாரண்கோணம் துணை ம...
-
தக்கலையில் கணவனை உதறிவிட்டு கள்ள காதலனுடன் சென்ற இளம்பெண்
-
கருங்கல் உலகன்விளை பகுதியை சேர்ந்தவர் ராஜன் மகன் அஜித் (18). இவர் நாகர்கோவில் கோணம் அரசு ஐடிஐ -ல் படித்து வந்தார். சம்பவ தினம் அதிகாலைய...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக