சனி, 7 செப்டம்பர், 2024

தக்கலை அருகே ரேஷன் கடையில் தீ விபத்து

தக்கலை பெருமாள் கோவில் தெருவில் அரசு நியாய விலை கடை ஒன்று உள்ளது. இங்கு ஏராளமான பொதுமக்கள் குடும்ப அட்டைகள் மூலம் தங்களுக்கு தேவையான ரேஷன் பொருள்களை வாங்கி செல்கின்றனர். இந்த நிலையில் இந்த ரேஷன் கடையில் இன்று காலை திடீரென மின்கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டது. இதை அடுத்து தீ மளமளவென பரவி ரேஷன்
கடையில் வைக்கப்பட்டிருந்த கணக்கு புத்தகங்கள், மற்றும் தேயிலை உள்ளிட்ட உணவுப் பொருட்களில் பரவியதில் அவை எரிந்து கொண்டிருந்ததை மக்கள் பார்த்தனர். உடனடியாக இது குறித்து தக்கலை தீயணைப்பு அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர். இதனால் பெரும் தீ வித்து தவிர்க்கப்பட்டது. பெரிய அளவில் சேதம் ஏற்படவில்லை என தெரிகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தக்கலை: பெண்ணை காப்பாற்ற தன்னை பலி கொடுத்த இளைஞர்

திக்கணங்கோடு அருகே உள்ள மேக்கோடு பகுதியை சேர்ந்தவர் சுனில் ராஜ் (36). பெயின்டர். இவர் நேற்று முன்தினம் திக்கணங்கோட்டில் இருந்து திங்கள்சந...