செவ்வாய், 3 செப்டம்பர், 2024

மார்த்தாண்டம் மசாஜ் சென்டரில் விபசாரம் 2 பேர் கைது; 3 பெண்கள் மீட்பு

மார்த்தாண்டம் பஸ் நிலையத்தை அடுத்த மதி ஜங்ஷனில் உள்ள தனியார் விடுதியில் மசாஜ் சென்டர் என்ற பெயரில் பெண்களை வைத்து விபச்சாரம் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேளாங்கண்ணி, சப்-இன்ஸ்பெக்டர் பெனடிக்ட் தலைமையிலான போலீசார் மசாஜ்
சென்டரில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு விபசாரம் நடந்தது உறுதி செய்யப்பட்டது. அங்கு பெண்களை வைத்து விபசாரத்தில் ஈடுபட்ட பொன்மனை ஈஞ்சக்கோடு பகுதியை சேர்ந்த யோபின் சாம், அழகிய மண்டபம் பகுதியை சேர்ந்த சந்திரபோஸ் ஆகியோரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். மேலும் விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட ராணிபேட்டை, திருப்புனம், தர்மபுரி பகுதியை சேர்த்த 3 இளம்பெண்கள் மீட்கப்பட்டனர். அவர்கள் 3பேரும் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர் ______________________________________________________________________________________________ குமரி மாவட்டத்தின் இன்றைய செய்தி துளிகள்:3.9.2024 * குமரி மாவட்டம் திடல் அருகே விளை நிலங்களில் புகுந்த யானை கூட்டம். சுமார் 1300 வாழை மற்றும் 20 க்கும் மேற்பட்ட தென்னை மரங்களை முறித்து நாசப்படுத்தியது.
*மார்த்தாண்டம் அருகே அரசு பேருந்தும் லாரியும் மோதிய விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தக்கலை: பெண்ணை காப்பாற்ற தன்னை பலி கொடுத்த இளைஞர்

திக்கணங்கோடு அருகே உள்ள மேக்கோடு பகுதியை சேர்ந்தவர் சுனில் ராஜ் (36). பெயின்டர். இவர் நேற்று முன்தினம் திக்கணங்கோட்டில் இருந்து திங்கள்சந...