வியாழன், 9 ஏப்ரல், 2020

குளத்தில் மீன்பிடித்த 4 பேர் மீது வழக்கு

ஊரடங்கை மீறி

குளத்தில் மீன்பிடித்த 4 பேர் மீது வழக்கு

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இந்தநிலையில் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் மருந்துகள் மட்டும் வாங்க பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வருகிறார்கள்.

இந்நிலையில்  தக்கலை சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான போலீசார் மருதவிளை கொற்றிகுளம் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் உள்ள குளத்தில் அழகியமண்டபம் பனங்காலவிளை பகுதியை சேர்ந்த ராஜன்(வயது 39), அருள்(39), ஸ்டான்லி(32), சதீஷ்(29) ஆகிய 4 பேர் மீன் பிடித்து கொண்டிருந்தனர். இவர்கள் மீது ஊரடங்கு உத்தரவை மீறியதாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தக்கலை: பெண்ணை காப்பாற்ற தன்னை பலி கொடுத்த இளைஞர்

திக்கணங்கோடு அருகே உள்ள மேக்கோடு பகுதியை சேர்ந்தவர் சுனில் ராஜ் (36). பெயின்டர். இவர் நேற்று முன்தினம் திக்கணங்கோட்டில் இருந்து திங்கள்சந...