சனி, 18 ஏப்ரல், 2020

ஊரடங்கின் போதுகள்ளச்சாராயம் விற்றதாக 56 பேர் கைது





மனித உயிர்கொல்லி நோயாக விளங்கும் கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு வருகிற 3-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன.

இதனால் கள்ளச்சாராயம் விற்பனை அமோகமாக நடந்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து கடற்கரை மற்றும் மலையோர கிராமங்கள், மாவட்டத்தின் பல்வேறு முக்கிய பகுதிகளிலும் ஹெலி கேமரா மூலம் போலீசார் கண்காணித்தனர். அப்போது ஏராளமான இடங்களில் கள்ளச்சாராயம் விற்பனை நடந்தது தெரியவந்தது. அந்த வகையில் குமரி மாவட்டத்தில் ஊரடங்கின் போது 37 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 56 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தக்கலை: பெண்ணை காப்பாற்ற தன்னை பலி கொடுத்த இளைஞர்

திக்கணங்கோடு அருகே உள்ள மேக்கோடு பகுதியை சேர்ந்தவர் சுனில் ராஜ் (36). பெயின்டர். இவர் நேற்று முன்தினம் திக்கணங்கோட்டில் இருந்து திங்கள்சந...