மனித உயிர்கொல்லி நோயாக விளங்கும் கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு வருகிற 3-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன.
இதனால் கள்ளச்சாராயம் விற்பனை அமோகமாக நடந்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து கடற்கரை மற்றும் மலையோர கிராமங்கள், மாவட்டத்தின் பல்வேறு முக்கிய பகுதிகளிலும் ஹெலி கேமரா மூலம் போலீசார் கண்காணித்தனர். அப்போது ஏராளமான இடங்களில் கள்ளச்சாராயம் விற்பனை நடந்தது தெரியவந்தது. அந்த வகையில் குமரி மாவட்டத்தில் ஊரடங்கின் போது 37 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 56 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக