சாமிதோப்பு அருகே உள்ள செட்டி விளையில் பூலாங்குளம் உள்ளது. அந்த வழியாக நேற்று காலை சென்றவர்கள், குளத்தில் ஆண் பிணம் மிதப்பதை பார்த்து, தென்தாமரைகுளம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக கன்னியாகுமரி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆவுடையப்பன், தென்தாமரைகுளம் சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு குளத்தில் மிதந்த பிணத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீஸ் விசாரணையில் இறந்தவர் நாகர்கோவில் அருகில் உள்ள கோட்டார் பகுதியைச் சேர்ந்த முத்துக்குமார் (வயது 45) என்பது தெரிய வந்தது. சாமிதோப்பு பதிக்கு வந்த அவர் குளத்தில் குளிக்க சென்ற போது, தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி இறந்து இருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள். இதுகுறித்து தென்தாமரைகுளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
தக்கலை: பெண்ணை காப்பாற்ற தன்னை பலி கொடுத்த இளைஞர்
திக்கணங்கோடு அருகே உள்ள மேக்கோடு பகுதியை சேர்ந்தவர் சுனில் ராஜ் (36). பெயின்டர். இவர் நேற்று முன்தினம் திக்கணங்கோட்டில் இருந்து திங்கள்சந...

-
03.09.2024 (செவ்வாய்க்கிழமை) அன்று காலை 08:00 மணி முதல் மாலை 2:00 மணி வரை நாகர்கோவில், வடசேரி, ஆசாரிபள்ளம் மற்றும் தடிகாரண்கோணம் துணை ம...
-
தக்கலையில் கணவனை உதறிவிட்டு கள்ள காதலனுடன் சென்ற இளம்பெண்
-
கருங்கல் உலகன்விளை பகுதியை சேர்ந்தவர் ராஜன் மகன் அஜித் (18). இவர் நாகர்கோவில் கோணம் அரசு ஐடிஐ -ல் படித்து வந்தார். சம்பவ தினம் அதிகாலைய...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக