வெள்ளி, 15 மே, 2020

விபத்தில் 2 பேர் காயம்



இரணியல் அருகே நெய்யூர் இரணியல்கோணம் பகுதியை சேர்ந்தவர் கண்ணன் (வயது 34). இவர் மோட்டார் சைக்கிளில் மேக்கா மண்டபத்தில் இருந்து அழகியமண்டபம் நோக்கி புறப்பட்டார்.

பின்னால் அவர் நண்பர் ரவீந்திரன் உட்கார்ந்து இருந்தார். பிலாங்காலை பகுதியில் மோட்டார் சைக்கிள் செல்லும் போது, எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட கண்ணன், ரவீந்திரன் ஆகிய இருவரும் படுகாயம் அடைந்தனர். அவர்கள் தக்கலை மணலி பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த விபத்து குறித்து தக்கலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தக்கலை: பெண்ணை காப்பாற்ற தன்னை பலி கொடுத்த இளைஞர்

திக்கணங்கோடு அருகே உள்ள மேக்கோடு பகுதியை சேர்ந்தவர் சுனில் ராஜ் (36). பெயின்டர். இவர் நேற்று முன்தினம் திக்கணங்கோட்டில் இருந்து திங்கள்சந...