செவ்வாய், 12 மே, 2020

குமரி மாவட்டத்தில் நடைபெறும்கொரோனா தடுப்பு பணிகளுக்கு முஸ்லிம் ஜமாஅத் பாராட்டு





குமரி மாவட்ட முஸ்லிம் ஜமா அத் கூட்டமைப்பு சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

உலகத்தை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மாவட்ட நிர்வாகம் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு குமரி மாவட்ட முஸ்லிம் ஜமா அத் கூட்டமைப்பு சார்பில் நன்றி கலந்த பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறோம். குறிப்பாக குமரி மாவட்டத்தில் கொரோனா பரவாமல் தடுக்க அனைத்து துறைகளையும் முடுக்கிவிட்டு தடுப்பு பணிகளை செய்து வரும் கலெக்டர் பிரசாந்த் வடநேரேவுக்கும், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத்துக்கும் பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறோம். கொரோனா வைரசுடன் போராடி வரும் டாக்டர்கள், நர்சுகள், மருத்துவம் சார்ந்த அனைத்து பணியாளர்களுக்கும், வைரஸ் மக்களை தாக்காமல் இருக்க உழைக்கும் நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் சரவணகுமார், அதிகாரிகள், துப்புரவு பணியாளர்கள் மற்றும் போலீசாருக்கு ஜமா அத் கூட்டமைப்பு சார்பில் நன்றி கலந்த பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறோம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தக்கலை: பெண்ணை காப்பாற்ற தன்னை பலி கொடுத்த இளைஞர்

திக்கணங்கோடு அருகே உள்ள மேக்கோடு பகுதியை சேர்ந்தவர் சுனில் ராஜ் (36). பெயின்டர். இவர் நேற்று முன்தினம் திக்கணங்கோட்டில் இருந்து திங்கள்சந...