திங்கள், 18 மே, 2020

தனியார் பள்ளி பெண் ஊழியர் தீக்குளித்து தற்கொலை



குலசேகரம் அருகே நாகக்கோடு அம்பலத்துவிளையை சேர்ந்தவர் டென்னிஸ் (வயது 30), தொழிலாளி. இவருடைய மனைவி ஐஸ்வர்யா (27), ஒரு தனியார் பள்ளியில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவர்களுக்கு 7 வயதில் ஒரு மகள் உண்டு. கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. சம்பவத்தன்று அவர்கள் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் மனமுடைந்த ஐஸ்வர்யா தன்மீது மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். படுகாயம் அடைந்த அவரை உறவினர்கள் மீட்டு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் ஐஸ்வர்யா பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து குலசேகரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தக்கலை: பெண்ணை காப்பாற்ற தன்னை பலி கொடுத்த இளைஞர்

திக்கணங்கோடு அருகே உள்ள மேக்கோடு பகுதியை சேர்ந்தவர் சுனில் ராஜ் (36). பெயின்டர். இவர் நேற்று முன்தினம் திக்கணங்கோட்டில் இருந்து திங்கள்சந...