ஆரல்வாய்மொழி அருகே திருவள்ளுவர்நகரை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 35), டெம்போ டிரைவர். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இதை அறிந்த பெண்ணின் கணவர் கார்த்திக்கை கண்டித்தார். இதனால், அவர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. பக்கத்து வீட்டில் உள்ள கண்ணன் அவரது மனைவி ராதிகா ஆகியோர் மோதலை விலக்கி விட சென்றனர்.
அப்போது, கார்த்திக்கும் அவரது கள்ளக்காதலியும் சேர்ந்து ‘ இந்த பிரச்சினைக்கு முழு காரணமும் நீங்கள்தான்’ எனக்கூறி கண்ணனையும் அவரது மனைவியையும் தாக்கினர். இதுகுறித்த புகாரின் பேரில் கார்த்திக் மற்றும் கள்ளக்காதலி மீது ஆரல்வாய்மொழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக