திங்கள், 18 மே, 2020

கிறிஸ்தவ ஆலயத்தில் திருட்டு



திருவட்டார் அருகே செறுகோல் குற்றிமாவிளையில் சி.எஸ்.ஐ. ஆலயம் உள்ளது. நேற்று காலையில் ஆலயத்தை சுத்தம் செய்வதற்காக சபை பணியாளர் ராபின் சென்றார். அப்போது, கதவு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் ஆலய நிர்வாகிகளுக்கு தகவல் கொடுத்தார். அவர்கள் விரைந்து வந்து பார்த்த போது, ஆலயத்தின் பின்பக்கத்தில் உள்ள அறையின் மேற்கூரை உடைக்கப்பட்டிருந்தது. ஆலயத்தில் இருந்த ஒலிபெருக்கி சாதனங்கள் போன்ற மின்சார பொருட்கள் திருடப்பட்டிருந்தன. மூடை கட்டி வைக்கப்பட்டிருந்த அந்த பொருட்களை மர்ம நபர்கள் ஆலயத்திற்குள் புகுந்து திருடி சென்றுள்ளனர். மேலும், சில பொருட்களை மூடை கட்டி விட்டு கொண்டு செல்ல முடியாததால் அப்படியே வைத்துவிட்டு சென்றுள்ளனர். இதுகுறித்து சபை செயலாளர் சிம்சோன் கொடுத்த புகாரின் பேரில் திருவட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தக்கலை: பெண்ணை காப்பாற்ற தன்னை பலி கொடுத்த இளைஞர்

திக்கணங்கோடு அருகே உள்ள மேக்கோடு பகுதியை சேர்ந்தவர் சுனில் ராஜ் (36). பெயின்டர். இவர் நேற்று முன்தினம் திக்கணங்கோட்டில் இருந்து திங்கள்சந...