வியாழன், 21 மே, 2020

இருதரப்பினர் மோதல்; 8 பேர் மீது வழக்கு

இருதரப்பினர் மோதல்; 8 பேர் மீது வழக்கு


தாழக்குடி மேலகாலனி கல்வெட்டான் குழியை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 50). இவருடைய மனைவி தாசம்மாள் (44). சம்பவத்தன்று தாசம்மாள் அவருடைய வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்த போது அதே பகுதியை சேர்ந்த பாஸ்கர் (42) என்பவர் தாசம்மாளை அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தாசம்மாள், பாஸ்கரனின் தந்தை கிறிஸ்துதாஸிடம் கூறியுள்ளார். இதனையடுத்து இருவருக்குமிடையே வாய் தகராறு ஏற்பட்டு கைகலப்பானது. பின்னர் தாசம்மாள் தரப்பினரும், கிறிஸ்துதாஸ் தரப்பினரும் மோதிக்கொண்டதாக தெரிகிறது. இதுகுறித்து தாசம்மாள் ஆரல்வாய்மொழி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் கிறிஸ்துதாஸ், அவருடைய மனைவி மார்த்தாள், மகன்கள் பாஸ்கர், சங்கர் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதேபோல கிறிஸ்துதாஸ் கொடுத்த புகாரின் பேரில் ராமச்சந்திரன், அவருடைய மனைவி தாசம்மாள், மகன்கள் சாருஹாசன், சுனில் ஆகிய 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தக்கலை: பெண்ணை காப்பாற்ற தன்னை பலி கொடுத்த இளைஞர்

திக்கணங்கோடு அருகே உள்ள மேக்கோடு பகுதியை சேர்ந்தவர் சுனில் ராஜ் (36). பெயின்டர். இவர் நேற்று முன்தினம் திக்கணங்கோட்டில் இருந்து திங்கள்சந...