வெள்ளி, 8 மே, 2020

வீடு புகுந்து நகை, பணம் திருட்டு

வீடு புகுந்து நகை, பணம் திருட்டு


தக்கலை அருகே பள்ளியாடி பகுதியை சேர்ந்தவர் பிளசட் சேம், வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி எமி கிராம்டா. இவர் சம்பவத்தன்று வீட்டை பூட்டிவிட்டு உடையார்விளையில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்றார்.

பின்னர், நேற்று முன்தினம் தனது வீட்டுக்கு திரும்ப வந்த போது, முன்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது, பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 1 பவுன் நகை, ரூ.20 ஆயிரம் பணம் ஆகியவை திருடப்பட்டிருந்தது.

வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் கதவை உடைத்து உள்ளே புகுந்து நகை மற்றும் பணத்தை திருடி சென்றுள்ளனர்.

இதுகுறித்த புகாரின் அடிப்படையில் திருவட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தக்கலை: பெண்ணை காப்பாற்ற தன்னை பலி கொடுத்த இளைஞர்

திக்கணங்கோடு அருகே உள்ள மேக்கோடு பகுதியை சேர்ந்தவர் சுனில் ராஜ் (36). பெயின்டர். இவர் நேற்று முன்தினம் திக்கணங்கோட்டில் இருந்து திங்கள்சந...