நாகர்கோவிலில் சுவரொட்டி ஒட்ட தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் கூறுகையில், நாகர்கோவில் மாநகராட்சியில் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கை கழுவுதல் தொடர்பாக மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். மேலும் ஓவிய கலைஞர்களை வைத்து விழிப்புணர்வு ஓவியங்களை வரைந்து உள்ளோம். இந்த ஓவியங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்படுவதாக புகார்கள் வந்தன. எனவே மக்கள் நலனை கருத்தில் கொண்டு சுவரொட்டி ஒட்ட தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஏனெனில் கொரோனா பாதிப்பு தற்போது முடியக் கூடியதாக இல்லை. எனவே மக்களின் விழிப்புணர்வு மிகவும் அவசியம். எனவே தான் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. அதோடு மரத்தில் ஆணி அடிக்கவும் தடை விதிக்கப்படுகிறது. தடையை மீறி சுவரொட்டி ஒட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தேவையெனில் விளம்பர நோட்டீஸ் அச்சடித்து வினியோகம் செய்து கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
தக்கலை: பெண்ணை காப்பாற்ற தன்னை பலி கொடுத்த இளைஞர்
திக்கணங்கோடு அருகே உள்ள மேக்கோடு பகுதியை சேர்ந்தவர் சுனில் ராஜ் (36). பெயின்டர். இவர் நேற்று முன்தினம் திக்கணங்கோட்டில் இருந்து திங்கள்சந...

-
03.09.2024 (செவ்வாய்க்கிழமை) அன்று காலை 08:00 மணி முதல் மாலை 2:00 மணி வரை நாகர்கோவில், வடசேரி, ஆசாரிபள்ளம் மற்றும் தடிகாரண்கோணம் துணை ம...
-
தக்கலையில் கணவனை உதறிவிட்டு கள்ள காதலனுடன் சென்ற இளம்பெண்
-
கருங்கல் உலகன்விளை பகுதியை சேர்ந்தவர் ராஜன் மகன் அஜித் (18). இவர் நாகர்கோவில் கோணம் அரசு ஐடிஐ -ல் படித்து வந்தார். சம்பவ தினம் அதிகாலைய...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக